சேலம், ஜன.5- சேலம் ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதனையில் கடந்த 2023 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.5.66 கோடி அபரா தம் வசூலிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிகப்பிரிவு சார்பில் முறைகேடுக ளைக் கண்டறியும் வகையில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தல், முறையற்ற பயணம், பதிவு செய்யப் படாத சரக்குகள் ஆகியவைகளைக் கண்டறிந்து அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. அந்த வகையில், நிதி யாண்டின் மூன்றாவது காலாண்டில் கடந்த 2023 அக்டோபர் முதல் டிசம்பர் வரை பயணச்சீட்டு இல்லாமல் பய ணம் செய்ததாக 44,370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.72 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. அதே போல சாதாரண பயணச்சீட்டு எடுத் துக் கொண்டு முன்பதிவு பெட்டி களில் பயணிப்பது போன்ற முறை யற்ற பயணம் செய்ததாக 35,379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1.93 கோடி அபராதம் வசூலிக்கப் பட்டது. முன்பதிவு செய்யப்படாத உடைமைகள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான உடைமை களை எடுத்துச் செல்லுதல் என 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.72,055 அபராதம் விதிக்கப்பட் டது. சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் கடந்த 2023 அக்டோபர் முதல் டிசம்பர் வரை 17,841 சோதனைகள் நடத்தப்பட்டு 79,852 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சோ தனை மூலம் ரூ.5.66 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டிசம்பர் மாதம் மட் டும் பயணச்சீட்டு இல்லாமல் பய ணம் செய்ததாக 13,775 வழக்குள் பதிவு செய்து ரூ.1.12 கோடியும், முறையற்ற பயணம் செய்ததாக 11,731 வழக்குகள் பதிவு செய்து ரூ.63.78 லட்சமும், முன்பதிவு செய் யாமல் உடைமைகளை எடுத்துச் சென்றதாக 43 வழக்குகள் பதிவு செய்து ரூ.20,463 அபராதம் வசூ லிக்கப்பட்டது. கடந்த 2023 டிசம்பர் மாத சோதனையில் மட்டும் ரூ.1.76 கோடி அபராதம் வசூலிக்கப்பட் டுள்ளது.