districts

பறக்கும் படை அதிகாரிகளால் ரூ.8.42 லட்சம் பறிமுதல்

திருப்பூர், பிப்.1-  திருப்பூர் மாநகராட்சியில் ஆசிரி யர் உள்பட 2 பேர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.8 லட்சத்து 42 ஆயிரத்து 500-ஐ பறக் கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகராட்சி பகுதி யில் உள்ளாட்சி தேர்தலுக்கான விதிமுறை அமலில் உள்ளது. இந்நி லையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தேர் தல் அதிகாரிகள் பறிமுதல் செய்கின் றனர். இதற்காக, திருப்பூர் மாநக ராட்சியில் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனை நடந்து வருகிறது.  இந்நிலையில் பறக்கும் படை  அதிகாரி பாண்டீஸ்வரி தலைமை யிலான அதிகாரிகள் செவ்வாயன்று  காலை திருப்பூர் கணக்கம்பாளை யம் பிரிவு அருகே வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த  காரில் வாரணாசிபாளையம் பிரிவை சேர்ந்த நல்லகணபதி (30),  என்ற அரசு பள்ளி ஆசிரியர் அமர்ந் திருந்தார். அவரது காரை சோதனை செய்தபோது, அதில் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப் பணம் இருந் தது. இதற்கான ஆவணம் நல்லகண பதியிடம் இல்லை. இதனால் அந்த  பணத்தை பறக்கும் படை அதிகா ரிகள் பறிமுதல் செய்தனர். இந்த  பணம் மாநகராட்சியில் உள்ள அதி காரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதுபோல் ஊத்துக்குளி கொளத்துப்பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி பெரிய சாமி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில்  வந்த பாரஸ் என்பவரின் காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.1 லட்சத்து 2 ஆயி ரத்து 500  ரொக்கம் இருந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் பாரஸி டம் இல்லாததால் பணத்தை அதிகா ரிகள் பறிமுதல் செய்தனர்.