districts

img

நூறுநாள் வேலை திட்டத்திற்கு ரூ 75 லட்சம் நிதி ஒதுக்கீடு

தருமபுரி, ஏப்.29- விவசாய தொழிலாளர் சங்கத் தின்போராட்ட அறிவிப்பால் வெள் ளாப்பட்டி ஊராட்சி நிர்வாகம்,  ரூ.75 லட்சத்தில்  மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தில் வேலை வழங்க எழுத்துப் பூர்வமாக  உறுதியளித்துள்ளது. தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளப்பட்டி ஊராட்சி. இந்த  ஊராட்சியில் வெள்ளாளப் பட்டி, மொளுகானூர், வி.கொல்ல அள்ளி,மந்தன் கொட்டாய், தாலி காரன்கொட்டாய், ஒட்டுக் கொட் டாய், புதூர் உள்ளிட்ட 12 கிராமங் கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள பெரும்பகுதி மக்கள் கூலி வேலை செய்துவருகின்றனர். இந்த   ஊராட்சியில் உள்ள  அனைத்து கிரா மங்களுக்கும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தில் வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு, ஏப்ரல் 29 - அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்த ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நோட்டீஸ் விநியோகித்து பிரச் சாரம் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஊராட்சி மன்ற நிர்வாகம், விதொச தலை வர்களை பேச்சுவார்த்தைக்கு  அழைத்து பேசினர். இதில், வெள் ளாளப்பட்டி  ஊராட்சிக்கு மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதி  திட்டத்தில் ரூ.75 லட்சத்தில் 3 பணி கள் வழங்குவதாக எழுத்துப்பூர்வ மாக ஊராட்சிமன்ற தலைவர் மீனாட்சி அர்சுணன், ஊராட்சி செய லாளர் தன்ராஜ் ஆகியோர் விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட  செயலாளர் எம்.முத்து, மாவட்ட  தலைவர் கே.கோவிந்தசாமி, ஒன்றிய தலைவர்  தீ.மாரியப்பன் ஆகியோரிடம் வழங்கினர். விதொசவின் போராட்ட அறி விப்பை செய்து, நூறுநாள் வேலையை பெற்றுத்தந்தமைக்கு சங்கத்திற்க்கு அப்பகுதி தொழி லாளர்கள் நன்றி தெரிவித்தனர்.