districts

குட்கா விற்பனை: ரூ.3.55 லட்சம் அபராதம்

சேலம், அக்.19- சேலம் மாவட்டத்தில் குட்கா விற்பனை யில் ஈடுபட்டிருந்த 71 பேருக்கு ரூ.3.55 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டு, 140 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட் கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், வெளி மாநிலத் திலிருந்து குட்கா பொருட்கள் சேலத்திற்கு கடத்தி வரப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுகிறது. இதை தடுக்க மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். அதன்படி அவ்வப்போது வரும்  தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குட்கா பொருட்கள் கடத்தி வரு பவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். அதேபோன்று மாவட்டத்தில் சில கடைகளில் குட்கா பதுக்கி விற்பனை செய்த வர்களின் கடைகளுக்கு சீல் வைத்து நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் கூறுகையில், மாவட்டம் முழுவதும் அவ்வப்போது கடைகளில் திடீர்  ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த  ஜூலை மாதம் முதல் இதுவரை 4 டன் குட்கா  பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை களில் பதுக்கி விற்பனை செய்த 71 பேர்க ளுக்கு ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதித்து, 140 கடைகளுக்கு சீல் வைக்கப்பட் டுள்ளன, என்றார்.