பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு, ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று, அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கம், பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பத்து ரூபாய் இயக்க மாநிலத் தலைவர் பத்மராஜ், பொதுச்செயலாளர் விஸ்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.