districts

கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.12.65 கோடி மோசடி: போலீசில் புகார்

சேலம், டிச.26- சேலம் மாநகராட்சி பணியா ளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் நாணய சங்கத்தில், கடன் பெற்ற  பணியாளர்கள் வங்கிக் கணக்கில்  ரூ.12.65 கோடி மோசடி செய்யப் பட்ட சம்பவம் குறித்து, அஸ்தம் பட்டி உதவி ஆணையர் அலுவல கத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் அஸ் தம்பட்டி மண்டல உதவி ஆணைய ரிடம், பல்வேறு தொழிற்சங்கத்தி னர் அளித்த புகாரில் கூறியுள்ளதா வது, சேலம் மாநகராட்சியில் உள்ள  நான்கு மண்டலத்திலும் மற்றும் மைய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளரின் குடும்ப தேவைக்காகவும், ஒவ்வொரு பணி யாளரின் ஏனைய தேவைகளுக் கும் சேலம் மாநகராட்சி பணியாளர் கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கத்தின் மூலம் கடன்  பெற்று இன்றளவு பணியாளர்கள் பயன்பெற்று வருகின்றோம். இதன் மூலம் பெற்ற கடன் தொகையினை திருப்பி செலுத்தும் பட்சத்தில், பணிபுரியும் பணியாளர்களின் கடன் தொகையினை மண்டல உதவி ஆணையாளரின் உத்தர வின்படி, மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளுமாறு ஏற்கனவே அனைத்து பணியாளர் கள் சம்மதம் தெரிவித்துக் கொண்டு, தற்பொழுது அந்த நிலைதான் இன் னும் நீடித்து வருகிறது. ஆனால், சேலம் மாநகராட்சி பணியாளர்கள் இதுநாள் வரை கூட்டுறவு சிக்கன  மற்றும் நாணய சங்கத்தில் கடன் தொகை திருப்பி செலுத்தவில்லை என அதிகாரிகள் கூறி வருகின்ற னர். கடன் சம்மந்தப்பட்ட நிலுவை தொகை மற்றும் பணியாளர்கள் திருப்பி செலுத்த வேண்டிய கடன்  எவ்வளவு அதன் அசல், வட்டி போன்ற சந்தேகங்களை கேட்டால், உங்கள் ஆணையாளரிடமும், துணை ஆணையாளரிடமும் மற் றும் மண்டல உதவி ஆணையாள ரிடமோ கேட்டுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் சொல்லி  வருகின்றனர். இதுவரை இறந்து போன பணியாளர்களுக்கு எந்த வொரு டெபாசிட் தொகை மற்றும் அதற்குரிய வட்டி பணமும் திருப்பி தரவில்லை. ஒவ்வொரு பணியாள ரும், கடன் தொகையினை திருப்பி  செலுத்திவிட்டால் அதற்குண்டான ஆட்சேபனை சான்றும் அளிப்ப தில்லை. இரண்டு வகையான பில்  வைத்துக் கொண்டு, சொசைட்டி  கணக்கர் எழுதி கொடுக்கிறார். அந்த ரசீதை கணினி மூலம் தரப் படும் பில்காப்பியுடன் தொடர்பு படுத்தி பார்க்கும்பொழுது, அந்த பில்லில் அதிக குளறுபடிகள் உள் ளது. இறந்துபோன தொழிலாளர்க ளுக்கு காப்பீட்டுத் தொகை அனைத் தும் வட்டி/அசல் என்று எல்லாத் தொகையினையும் சரிவர கணக்கு  காட்டாமல், அவர்களே எடுத்துக் கொண்டு ஈவு பணம் ஏதும் இல்லையென்றும், இறந்துபோன தொழிலாளர்கள் கட்டிய டெபாசிட் பணமும் தருவதும் இல்லை. மேற் படி கடன் தொகைக்கு கூட்டு வட்டி,  நாள் வட்டி என்று கணக்கில்லா மல் பணத்தை பிடித்தம் செய்து வரு கின்றனர். இதன்மூலம் பணியாளர் களின் வங்கிக் கணக்கில் ரூ.12.65 கோடி மோசடி செய்யப்பட்டுள் ளது. ஆகையால், இனிவரும் மாதங் களில் ஊதியம் பெறும் மண்டலத் தில் இருந்து சொசைட்டிக்கு தரும் கடன் தொகையினை பிடித்தம் செய்யாமல் பணியாளர்கள் நேரில்  சென்று கடன் தொகையை செலுத்த வழிவகுத்து தர வேண்டும். தொழி லாளர்களின் ஊதியத்தில் பிடித் தம் ஏதும் செய்ய வேண்டாம் என  மண்டல அலுவலகத்தில் சம்பளத் தில் பிடித்தம் செய்யும் கணக்க ருக்கு ஆணையாளர் உத்தரவிட வேண்டும். மேலும், ஏற்கனவே பிடித் தம் செய்த தொகையினை தொழி லாளர்களுக்கு திருப்பி தர வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.