கோவை, ஜூன் 10- கோவையில் இருந்து குஜராத் திற்கு சென்ற ஆன்மீக சுற்றுலா சென்று கொண்டிருந்த பேருந்தை பின்தொடர்ந்து, இருசக்கர வாகனத் தில் சென்று இளைஞர்கள் கொள் ளையடித்து சம்பவம் கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைதளங் களில் பரவி வருகிறது. கோவை மாவட்டம், கருமத்தம் பட்டியை அடுத்த வாகராயம்பாளை யம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 28 ஆம் தேதியன்று, 18 நாட்கள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களுக்கு சென்றனர். அதில் காசி, சாய்பாபா கோவில் ஆகியவற்றிற்கு தனி யார் சுற்றுலா பேருந்தில் சென்றுள் ளனர். இந்நிலையில், காசிக்கு சென்று விட்டு 7 ஆம் தேதியன்று இரவு ஒடிசாவில் இருந்து குஜராத் தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ள னர். அப்போது இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் பேருந் தில் வந்து கொண்டிருந்தபோது அதி காலை 4 மணிளவில் குஜராத்தில் உள்ள தங்கும் விடுதி அருகே நின் றுள்ளனர். அப்போது பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்து காணப்பட்ட தால் சந்தேகமடைந்த ஓட்டுநர், உதவி யாளர் பேருந்தின் மீது ஏறி உடமை களை சரி பார்த்தபோது சிலரின் உட மைகள் காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து பேருந்தின் பின் பக்கம் பொருத்தி இருந்த கண்கா ணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 2 மணிளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது, பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில், ஒருவர் ஓடும் பேருந்தில் தாவி ஏறு வதும் பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளை கீழே வீசுவதும் பதிவாகி இருந்தது. அத்துடன் ஓடும் பேருந்தில் இருந்து இரு சக்கர வாகனத்திற்கு தாவும் காட்சியும் பதிவாகி இருந்தது. ஓடும் பேருந்து மேல் பகுதியிலி ருந்து உடமைகளை கொள்ளைய டித்த காட்சிகளை சமூக வலைதளங் களில் பகிர்ந்து வரும் வலைத்தள வாசிகள் குஜராத் மாடலில் இது வருமா? என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.