districts

img

சேலத்தில் அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளை - பொதுமக்கள் அதிர்ச்சி

சேலம், டிச.26- சேலத்தில் அடுத்தடுத்த 4 கடைகளில் கொள்ளைய டிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா செல்லும் பிர தான சாலையில் அமைந்துள்ள அழகாபுரம் காவல்  நிலையம் அருகே ஒரே வளாகத்தில் 3 துணிக் கடை களில் அடுத்தடுத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள் ளது. இந்த கடைகளில் ஞாயிறன்று அதிகாலை சுமார்  மூன்று மணியளவில் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல் கடைகளில் இருந்த ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அழகாபுரம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித் தும், சிசிடிவி காட்சி பதிவை கொண்டும் கொள்ளையர் களை தேடி வருகின்றனர். இதேபோல் அழகாபுரம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள தனியார் மெடிக் கல் கடை ஒன்றில் ரூ.24 ஆயிரம் பணம் கொள்ளை  அடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் காவல் நிலை யம் அருகே உள்ள கடைகளில் பணம் கொள்ளையடிக் கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.