districts

img

திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,பிப்.14 - திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் சாலை யோர வியாபாரிகளை கணக்கெடுத்து மாநகராட்சி நிர்வாகம்  சார்பில் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், சாலை யோர வியாபாரிகளுக்கு மதுரை, ஈரோடு மாநகராட்சியில் வழங்கியது போல திருப்பூர் மாநகராட்சியிலும் தள்ளு வண்டி கள் வழங்கிட வேண்டும், வெண்டிங் கமிட்டி தேர்தலை  உடனடியாக நடத்திட வேண்டும், பிரதான சாலைகளில் வியா பாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளை மத்திய, மாநில  அரசு சட்டங்களை மீறி பொருட்களை பறிமுதல் செய்யக்கூ டாது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்  தலைவர் பி.முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பி.பாலன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், வழக்கறிஞர் வை.ஆனந்தன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக கே.மணி நன்றி  கூறினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநகராட்சி அலுவல கத்தில் சிஐடியு சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.