திருப்பூர், ஜூலை 21- திருப்பூர் பல்லடம் சாலை யில் உழவர் சந்தை அருகே சாலையோரம் தரைக் கடை அமைத்து பழம் வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுக் கப்பட்டதை கண்டித்து சிஐடியு தலைமையில் சாலையோர வியாபாரிகள் அதிகாலை யில் போராட்டம் நடத்தினர். தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை அருகே திருப்பூர் தெற்கு உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு வரும் வழியில் பல்லடம் சாலை ஓரத்தில் தரைக்கடை அமைத்து சாலையோர வியாபாரிகள் பழம் விற்பனை செய்து வந்தனர். பல ஆண்டு காலமாக தொடர்ந்து வியாபாரம் செய்து வந்த நிலையில், சமீப காலமாக இந்த கடை அமைக்க கூடாது என்று மாநக ராட்சி நிர்வாகம் கடைகளை அகற்றி வருகிறது. உழவர் சந்தை விவசாயி கள் இந்த கடை நடத்த எதிர்ப்பு தெரிவிப் பதாக கூறி சாலையோர வியாபாரிகள் அப்புறப்படுத்தப்படுகின்றனர்.
ஆனால் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை நடைபெறும் நிலையில், சாலையோர தரைக் கடைகளில் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதனால் உழவர் சந்தை வியாபாரம் பாதிப்ப தாக கூறுவது சரியல்ல என சிஐடியு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அதி காலை நாலரை மணி அளவில் சாலை யோர வியாபாரிகள் சுமார் 25 பேர் பல்ல டம் சாலையில் உழவர் சந்தைக்கு செல் லும் பாதை அருகே தாங்கள் கொண்டு வந்திருந்த பழங்களை தரையில் வைத்து போராட்டம் நடத்தினர். சாலை யோரம் தலைக்கடை நடத்த அனும திக்க வேண்டும் என்று போராட்டத் தில் ஈடுபட்டதாக சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பி. பாலன் தெரிவித்தார். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நூற்றுக்கணக்கான வியாபாரிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.