districts

img

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதிகள் கேட்டு சாலைமறியல்

தாராபுரம், பிப்.24- தாராபுரம் வீட்டு வசதி வாரிய குடியி ருப்பில் அடிப்படை வசதிகள் கேட்டு குடி யிருப்புவாசிகள் சாலைமறியலில்  ஈடுபட்டனர். தாராபுரம், உடுமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய  குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதி குடியிருப்புவாசி கள் அடிப்படை வசதி கேட்டு வியாழன்று  இரவு தாராபுரம் உடுமலை சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து, சாலை மறியலில் ஈடு பட்டவர்கள் தெரிவிக்கையில், குடியி ருப்பை சுற்றிலும் செடி கொடிகள் முளைத்து பராமரிப்பின்றி உள்ளது. இத னால் பாம்பு மற்றும் பூச்சிகள் சுற்றி திரி கின்றன. இரவு நேரங்களில் வெளியே வர அச்சமாக உள்ளது. குடி நீர் முறையாக வருவதில்லை. ஆழ் துளை குடிநீர் குழாயும் பழுதடைந்து விட்டது. சாக்கடைகள் மழைக்காலங்க ளில் அடைத்து கொண்டு குடியிருப்பு முழுவதும் வெள்ளக்காடாக மாறி விடும். இதுகுறித்து பல்வேறு முறை  மனு அளிக்கப்பட்டும் நகராட்சி நிர்வா கமும், வீட்டு வசதி வாரிய நிர்வாகமும் மெத்தனம் காட்டிவருகின்றனர் எனத்  தெரிவித்தனர். பொதுமக்கள் சாலைம றியலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் நகராட்சி தலைவர் கு. பாப்புகண்ணன் மற்றும் காவல் ஆய்வா ளர் மணிகண்டன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதுகுறித்து, நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் பொதுமக்களிடம் தெரி விக்கையில், இந்த குடியிருப்புகள் வீட்டு வசதி வாரிய கட்டுப்பாட்டில் உள் ளது. இப்பகுதிக்கு தேவையான அடிப் படை வசதிகளை அவர்கள் செய்து  தரவேண்டும். தேவையான அடிப்படை  வசதிகளை உடனுக்குடன் பராமரிக்கா மல் விட்டுவிட்டதால் இப்பிரச்சினை ஏற் பட்டுள்ளது. இருப்பினும் நகராட்சி நிர் வாகம் சார்பில் அடிப்படை வசதிகளை  செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதை ஏற்று பொது மக்கள் மறியலை கைவிட்டனர். பொது மக்கள் மறியல் காரணமாக சிறிது  நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.