districts

img

வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி கடிதம் அனுப்பிய சாலைப்பணியாளர்கள்

உடுமலை, செப்.29- இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்ப டையில் வேலை வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் மற்றும் துறை அமைச் சருக்கு சாலைப் பணியாளர்கள் குடும் பத்துடன் கோரிக்கை கடிதங்களை அனுப்பினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 8 ஆவது மாநில  மாநாட்டு அறைகூவல் படி சாலைப்பணியாளர் குடும்பத்தினர் கோரிக்கை மனுவை தபால் மூலம் அனுப்பும் இயக்கம் உடுமலை, அவி நாசி ஆகிய பகுதிகளில் நடைபெற் றது.  இந்த மனுவில், சாலைப்பணியா ளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இறந்த  சாலைப்பணியாளர்களின் வாரிசுக ளுக்கு நெடுஞ்சாலைத்துறையிலேயே கருணை அடிப்படையில் பணி நியமனம்  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.   தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் தாராபுரம்  கோட்டம், உடுமலை உட்கோட்ட தலை வர் ஜெகதீஸ்வரன் தலைமையில்  நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர் ஆ.அம்ச ராஜ், உட்கோட்ட செயலாளர் செல்ல முத்து,  கோட்டத்தலைவர்  வெங்கிடு சாமி, உட்கோட்ட பொருளாளர் கருப் புச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல, அவிநாசி உட்கோட்டத் தில் குடும்பத்துடன் கோரிக்கை மனு தபால் அனுப்பும் இயக்கம் அவிநாசி தலைமை தபால் அலுவலகத்தில் நடை பெற்றது. உட்கோட்ட தலைவர் ராஜேந் திரன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், உட்கோட்ட செயலாளர் முருகேசன், கோட்டத்தலைவர் ஆர்.கருப்பன், கோட்ட செயலாளர் ஆர்.ராமன், உட்கோட்ட பொருளாளர் எம்.வெங்கடன் சிவசாமி, காளியப்பன் உட் பட பலர் பங்கேற்றனர்.