திருப்பூர், அக். 28 - சாதிய வன்மத்துடன் நவீன தீண்டாமையைக் கடைபிடிக்கும் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி சாலைப் பணியாளர் சங்கத்தினர் நீதி கேட்டு திங்களன்று ஏழாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியா ளராகப் பணியாற்றி வருபவர் இரா. கணேசமுர்த்தி. ஆதிக்க சாதி குணத்துடன் நவீன தீண்டா மையைக் கடைப்பிடித்து பணியா ளர்களை இழிவுபடுத்தும் செயலில் அவர் ஈடுபட்டு வருகிறார், குறிப் பாக ஆய்வுக்கூட்டம் என்ற பெய ரில் சாலைப் பணியாளர்களை இருக்கை போடாமல் நிற்க வைத்து அச்சுறுத்துவது, சாலைப் பணியா ளருக்கு சம்பளம் மற்றும் முன்ப ணம் தர மறுப்பது என்று ஆணவப் போக்குடன் செயல்படுகிறார் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் சாலைப் பணியாளர்களை இழிவு படுத்தி, மனித உரிமை மீறல் பிரச் சனைகளை உருவாக்கி வருவதாக வும் கூறியுள்ளனர். எனவே தாராபுரம் உதவி கோட் டப் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலைப் பணி யாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலி யுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டிய தாராபுரம் கோட்டப் பொறியாளர் ராணி, நடவ டிக்கை எடுக்காமல் அவருக்கு சாத கமாக செயல்படுவதாகவும் சாலைப் பணியாளர் சங்கத்தினர் புகார் கூறுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இப் பிரச்சனையில் தலையிட்டு சாலைப் பணியாளர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று சாலைப் பணியாளர் சங்கத்தினர் வலியு றுத்தி உள்ளனர். எனினும் பேச்சு வார்த்தைக்கு உடன்படாமல், கோரிக்கைகளை நிறைவேற்றித் தர மறுத்து, எழுத்துப்பூர்வமாக உத் தரவாதம் அளிக்க இயலாது என்று தாராபுரம் கோட்டப் பொறியாளர் ஏளனப் போக்குடன் செயல்படு வதாக கூறி, சாலைப் பணியாளர்கள் தாராபுரம் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் தொடர் போராட் டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஏழு நாட்களாக சாலைப் பணியா ளர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. எனினும் உயர் அதிகாரிகள் இப் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மெத்தனப் போக்குடன் உள்ளதா கக் கூறி, திங்களன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாலைப் பணியாளர்களை அணிதி ரட்டி தாராபுரம் கோட்டப் பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெ றும் போராட்டத்தை வலுப்படுத்து வது என்றும், திருப்பூர் கண் காணிப்புப் பொறியாளர் அலுவலகத் தின் முன்பு நீதி கேட்டுப் போராட் டம் நடத்துவது என்றும் தீர்மானித்த னர். அதன்படி திங்களன்று திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள நெடுஞ் சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தின் முன்பு நீதி கேட்டுப் போராட்டத்தை நடத்தினர். இதில் திருவண்ணா மலை, செஞ்சி, கிருஷ்ணகிரி, தரும புரி, ஈரோடு, கோவை, நீலகிரி, கோபி, கள்ளக்குறிச்சி, சேலம், எடப் பாடி, நாமக்கல், பொள்ளாச்சி உள் ளிட்ட கோட்டங்களைச் சேர்ந்த சாலைப் பணியாளர்கள் பெருந்திர ளாகக் கலந்து கொண்டனர். இப் போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிங்கராயன் தலைமை ஏற்றார். மாநிலச் செயலா ளர்கள் கு.பழனிச்சாமி, சு.செந்தில் நாதன், மாநிலத் துணைத் தலைவர் பி.முத்து உள்பட மாநில, கோட்ட, உட்கோட்ட நிர்வாகிகளும் பங் கேற்றனர்.