districts

img

சாலைப் பணியாளர் சங்க அவிநாசி உட்கோட்ட மாநாடு

திருப்பூர், ஜூன் 15 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் அவிநாசி 8ஆவது உட்கோட்ட மாநாடு  நெடுஞ் சாலைத்துறை வளாகத்தில் நடைபெற்றது. உட்கோட்ட தலைவர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாலை பணியாளர்களின் 41  மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்ப லன் வழங்க வேண்டும். விதிமுறைகளை தளர்த்தி வாரிசு பணி  வழங்கிட வேண்டும். முடக்கப்பட்ட பஞ்சப்படி, சரண் விடுப்பு  ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வேளாண்துறை உதவி யாளர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் எஸ்.சின்ராஜ்,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட்டக் கிளை தலைவர் விஜய லட்சுமி, கோட்டச் செயலாளர் ஆர். ராமன் ஆகியோர் வாழ்த்து  பேசினர். இதில், செயற்குழு உறுப்பினர் கே.காளியப்பன், கோட்ட பொருளாளர் ஆர்.கருப்பன், உட்கோட்ட செயலாளர்  ஏ.முருகேசன், உட்கோட்ட பொருளாளர் எம்.வெங்கிட்டான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.