districts

img

கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் ரூ.5லட்சம் மதிப்பில் சாலை பணி தொடக்கம்

தாராபுரம், மார்ச் 7- கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் சாலைபணி தொடக்க விழா நடைபெற்றது. தாராபுரம் வட்டம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட வினோபா நகரில் ரூ.5 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாச்சிமுத்து, நகராட்சி கவுன்சிலர் துரை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சாலை பணியை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற 2 ஆவது வார்டு உறுப்பினர் தனலட்சுமி நாகராஜ், 3 ஆவது வார்டு உறுப்பினர் நர் மதா ஈஸ்வரன், 6 ஆவது வார்டு உறுப்பி னர் குப்புசாமி, 8 ஆவது வார்டு உறுப்பினர் புனிதா கார்த்திக்செல்வன், ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலா ளர் பெரியசாமி செய்திருந்தார்.