கோவை, ஜன.13- இந்த வருட பொங்கல் பண்டிகையை சாலை பாதுகாப்பு பொங்கல் பண்டிகையாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கோவையில், சாலை பாதுகாப்பு வாரத் தின் 2ஆவது நாள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதி யாக கோவை - லட்சுமி மில்ஸ் சிக்னலில் தன்னார்வ தொண்டு அமைப்பும், மாநகர காவல் துறையினரும் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தினர். இந்நிகழ்வில் கல்லூரி மாணவ - மாணவி கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடன அசைவுகளுடன் வாகன ஒட்டிகளி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், தலைகவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டது. தலைகவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங் கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்தும் பாதுகாப்பான பயணங் கள் குறித்தும் எடுத்துரைத்தார். போக்கு வரத்து துணை ஆணையாளர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் மாநகர காவல் ஆணையாளர் வி.பால கிருஷ்ணன் கூறியதாவது, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் கல்லூரி களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று உள்ள னர்.
வருகின்ற 15ஆம் தேதி கோவை மாநகரி லுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை டாக்ஸி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் கண் மருத்துவமனைகள் மூலம் கண் பரிசோதனை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. 16 ஆம் தேதி மாநகரம் முழு வதும் உள்ள காவல் நிலையங்களில் சாலை பாதுகாப்பை வலியுறுத்துகின்ற வகையில் மாரத்தான் போட்டி நடத்த திட்டமிட்டுள்ள தாகவும், அதில் பத்தாயிரத்துக்கும் மேற் பட்டோர் பங்கு பெற உள்ளார்கள் என தெரி வித்தார். 17ஆம் தேதி பொங்கல் பண்டிகையை யொட்டி, சாலை பாதுகாப்பு பொங்கல் பண்டி கையாக கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பொது மக்கள், வாகன ஓட்டிகள் இணைந்து கொண் டாட உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, வெள்ளியன்று இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி கோவையில் நடைபெற்றது. இதனை கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் துவக்கிவைத்தார். கோவையில் மாநகர போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், 300க்கும் மேற்பட்ட போலீசார், ரோட்டரி கிளப்பை சேர்ந்த வர்கள் மற்றும் உயிர் அமைப்பினர் பங் கேற்றனர். கோவை வ.உ.சி மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணி, மத்திய சிறைச் சாலை வழியாக காந்திபுரம் 100 அடி ரோடு வரை சென்று மீண்டும் வ.உ.சி மைதா னத்தை வந்தடைந்தது.