districts

img

வழித்தடம் ஆக்கிரமிப்பு: மக்கள் தவிப்பு

சேலம், பிப்.9- சங்ககிரியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்துக்கு வழித்தடமின்றி அப்பகுதி பொது மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி, 15 ஆவது வார்டுக்குட்பட்ட சங்ககிரி - ஈரோடு பிரதான சாலையோ ரம் முனியப்பம்பாளையம், கூலையன்காடு ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த நல்லா கவுண்டர், ராமசாமி, வருதப்பகவுண்டர், சின்னா கவுண்டர் ஆகிய உடன் பிறந்த சகோதரர்கள். நான்கு பேரும் கடந்த 1961 ஆம் ஆண்டு அனைவருக்கும் பொதுவான வழித்தடத்தை பிரித்து பாகப்பிரிவினை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில், நல்லா கவுண்டரின் பாகம் சங்ககிரியிருந்து இருந்து ஈரோடு  செல்லும் பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ள நிலையில், அவரது மருமகன் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் சுந்தரம் என்பவர், கூலையன்காடு, முனி யப்பம்பாளையம் குடியிருப்பு பகுதிகளுக்கு பல ஆண்டுகளாக சென்று வந்த பொது வழித்தடத்தை கடந் தாண்டு ஆக்கிரமிப்பு செய்து கொண்டதால் இரு தரப் பினிடையே மோதல் ஏற்பட்டது. இதுசம்பந்தமாக சங்ககிரி நீதிமன்றம் வழித்தடத்தை  தடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்த பின்னரும், சனி யன்று நள்ளிரவில் வழித்தடத்தை மறித்து கிராவல் மண்ணை கொட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் சமப்ப டுத்திய போது, மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பெண்கள் உட்பட பலர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட அப்பகுதி விவசாயி களும், குடியிருப்பு வாசிகளும் கூறுகையில், பல  ஆண்டுகளாக சென்று வந்த வழிதடத்தை நீதிமன்ற உத்தரவையும் மீறி சுந்தரம் என்பவர், வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.