கோவை, மார்ச் 27- ஒண்டிபுதூர் அருகே சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் கடவு எண் 3 ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் பாதையை பயன்படுத்தி, சிவ லிங்காபுரம், காமாட்சி நகர், சக்தி நகர் உள் ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர். ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. இதுகுறித்து எந்த அறிவிப்பும் வராத நிலையில், சூர்யா நகர் பகுதி மக்கள் திருச்சி தேசியநெடுஞ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனைத்தொடர்ந்து, மறியலில் ஈடு பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டட்தில், சிவலிங்காபுரம், காமாட்சி நகர், சக்தி நகர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தெய் வேந்திரன், தலைவர் சொக்கலிங்கம், செய லாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் உட னிருந்தனர்.