districts

img

தாராபுரத்தில் வியாபாரிகள் சாலை மறியல்

தாராபுரம், ஜூலை 10-  தாராபுரம் நகராட்சியில் வியாபா ரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நக ராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி நடை பெற்று வருகிறது. நெடுஞ்சாலை துறை மூலம் தாராபுரம் கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலை மையில் அண்ணா சிலை முதல் சுங் கம் வரையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணி கடந்த 6 ஆம்  தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, பொள்ளாச்சி ரோடு, 5, சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் சாலை போக்குவரத்துக்கு இடை யூறு செய்யும் விதமாக சாலையை  ஆக்கிரமித்து வணிக வளாகங்களில்  கடைகளின் படிக்கட்டுகள் கட்டப்பட் டிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதை அடுத்து நெடுஞ்சாலை துறையினர் 2,  ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய  கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றினர். அப்போது அங்கு நகராட்சிக்கு சொந்தமான சாக்கடை கள் உடைக்கப்பட்டன. இதனால் தற் காலிக சாக்கடை பணிக்காக வேண்டி  வெறும் ஹாலோ பிளாக் கல்லை வைத்து சாக்கடையை சரி செய்ய  அதிகாரிகள் முன் வந்தனர்.

ஆனால் அது நிரந்தரமான சாக்கடை பணி யாக இருக்காது என வியாபாரிகள் குற்றம்சாட்டினர். மேலும் கடைகள் உயரமாக கட்டப்பட்டு இருப்பதால் படிகள் இல்லாமல் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியவில்லை என தெரிவித்தனர்.  எனவே கடந்த மூன்று நாட்க ளாக கடைவீதி பகுதியில் அனைத்து வியாபாரிகளும் விற்பனையின்றி சிர மடைந்தனர். இதனால் ஆத்திரம டைந்த கடை உரிமையாளர்கள் மற் றும் வியாபாரிகள் பெரியகடைவீதி பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாராபுரம் போலீசார் சம் பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளி டத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஆனால் வியாபாரிகள் சாலை மறி யல் போராட்டத்தை கைவிடவில்லை  இதனை அடுத்து நகராட்சி ஆணை யாளர் ராமர், சம்பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு வியாபாரிகளின் குறைகளை கேட்டு  அறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து தருவதாக வாக் குறுதி அளித்தார். அதனை தொடர்ந்து வியாபாரிகள் தற்காலிக மாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இத னால் பெரிய கடைவீதி பகுதியில் ஒரு  மணி நேரத்துக்கு மேலாக போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது.