சேலம், ஜன.5- சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் நிலவும் குடிநீர் இணைப்பு பிரச்ச னையை தீர்க்க வேண்டும், என வலியு றுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி, 47 ஆவது வார் டுக்குட்பட்ட குகை, ஆண்டிப்பட்டி ஹவு சிங் போர்டில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் இணைப் புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மாமன்ற உறுப்பினர் புனிதா, சட்ட விரோ தமாக புதிய இணைப்புகளை வழங்கி யுள்ளார். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அத னையும் மீறி குடிநீர் இணைப்பு வழங்கப் பட்டது. இதனைக் கண்டித்து, வழக்கறி ஞர் பிரதாபன் என்பவரின் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் சனியன்று பிர பாத் சிக்னல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், மாநகராட்சி அதி காரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, சட்டத் துக்கு புறமாக அமைக்கப்பட்ட இணைப்புகளை துண்டிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைய டுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றபோது, கவுன்சிலர் தரப்பைச் சேர்ந்தவர்கள் குடிநீர் இணைப்பை துண்டிக்கக்கூடாது எனக்கூறியதால், மீண்டும் பொதுமக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். அதன்பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கைது நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.