தருமபுரி, மே 25- பெரியானூர் கிராம மக்கள் சுடுகாடு வசதி கேட்டு பஞ்சப்பள்ளி - மாரண்ட அள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம்.பாலக்கோடை அடுத்த பஞ்சப்பள்ளி பஞ்சாயத்திற்கு உட் பட்ட பெரியானூர் கிராமத்தில் 30க்கும் மேற் பட்ட அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இம்மக்கள் 70 ஆண்டு களுக்கும் மேலாக இங்கு வசித்து வருகின்ற நிலையிலும், இவர்களுக்கு என்று இதுவரை சுடுகாடு வசதி இல்லை. இது குறித்து இந்த கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் சுடுகாடு கேட்டு மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படுவில்லை. இதனால் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக இறந்தவர்களை அவர் களுடைய சொந்த நிலத்திலேயே அடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், திங்களன்று பெரியா னூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரை அவரின் உறவினர்கள் சொந்த நிலத்தில் அடக்கம் செய்துள்ளனர். அண் ணன் இறந்த அதிர்ச்சியில் இருந்த திருப்பதி யின் தம்பி சென்னையன் செவ்வாயன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை யடுத்து அவரை அடக்கம் செய்வதற்கு சுடு காடு இல்லாததால் பெரியானூர் கிராமத்து மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சுடுகாடு வசதி கேட்டு செவ்வாயன்று பஞ்சப்பள்ளி மாரண் டஅள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்ட னர். இதனை அடுத்து அங்கு வந்த வட்டாட் சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட் டோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுடுகாடு வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித் ததை தொடர்ந்து அடுத்து மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.