உடுமலை, டிச.4- உடுமலையில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் கழிவு நீர் முழுவதும் ஓடையில் கலப்ப தால் தொற்று நோய் பரவும் ஆபயம் ஏற்பட்டுள்ளது. உடுமலை நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுக ளில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். கடந்த 2013 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத் தின் சார்பில் 56.07 கோடி மதிப்பில் நகர் பகுதி முழுவதும் சுமார் 97 கிலோ மீட்டர் நீளத்தில் 3,900 இறங்கு குழாய்கள் மூலம் சாக்கடை நீர் சேகரிக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்ய ஏரிப் பாளையம் பகுதியில் 7.81 எம்எல்டி திறன் கொண்ட சுத்திக ரிப்பு மையம் அமைக்கப்பட்டது. உடுமலை நகரில் இருந்து சேகரிக்கப்பட்ட சாக்கடை நீர், குழாய் வழியாக ஏரிப்பாளையம் சுத்திகரிப்பு நிலையத் திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்த இத்திட்டத் தில் ஏற்பட்ட குளறுபடியாலும், சுத்திகரிப்பு நிலையம் முறை யாக பராமரிப்பு செய்யப்படாததாலும் அங்கு வரும் சாக் கடை நீரை, சுத்திகரிப்பு செய்யாமலே அருகில் உள்ள ராச வாய்கால் ஓடையில் திறந்து விடுகின்றனர். இரவு நேரங் களில் சட்ட விரோதமாக நடைபெறும் இச்செயலால் அப்பகு தியை கடந்து செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசி வரு கிறது. இந்நிலையில், தற்பொழுது உடுமலை பகுதிகளில் பெய்து வரும் மழையால், ராசவாய்க்கால் ஓடையில் தண் ணீர் சென்று கொண்டு உள்ளது. இந்த நீர் குறுச்சேரி வழியாக, உப்பாறு ஓடைக்கு சென்று இறுதியாக உப்பாறு அணையை சென்றடைவதால் கழிவு நீர் கலந்து உப்பாறு அணையின் தண்ணீரும் மாசுப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பெரிய அளவில் சுகாதரகேடு ஏற்படும் வகையில் இருக்கும் இந்த பாதள சாக்கடை நீரை முறையாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.