districts

சுகாதார கேடுகளால் காய்ச்சல் பரவும் அபாயம்

உடுமலை, டிச. 20- உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முறையாக சாக்கடைகளை சுத்தம் செய்யாமல் இருப்பதால் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  உடுமலை , குடிமங்கம் மற்றும் மடத்துக் குளம் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும்  பேரூராட்சி பகுதிகளில் துப்புரவு மற்றும் சாக் கடைகளை தூய்மை படுத்த போதிய ஊழி யர்கள் இல்லாமல் இருப்பதால் பல இடங்க ளில் சாக்கடை மற்றும் தெருகளில் குப்பை கள் தேங்கி உள்ளது. குப்பை மற்றும் சாக்க டைகளால் தற்பொழுது வேகமாக பரவி  வரும் காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொது மக்கள் கூறுகை யில், உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை சளி, காய்ச்சலுடன் மருத்து வமனைக்கு செல்கின்றனர். இப்பகுதிகளில், சுத்தமான குடிநீர் கிடைப்பது இல்லை, சாக் கடைகளை சுத்தம் செய்வதில்லை, ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப் பதில்லை. உடனடியாக, வேகமாக பரவி  வரும் காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு  அரசு சார்பில் விழிப்புணர்வு செய்ய வேண் டும்,  அனைத்து பொது இடங்களையும் சுத்த மாக வைப்பதற்கும், சுத்தமான குடிநீர் கிடைப் பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.