உதகை, மே 26- பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுதால், சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே மழ வன் சேரம்பாடி, கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் (டேன்டீ) ரேஞ்ச் எண்.2, காவயல், புஞ்சவயல் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையே, மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சவயல் செல்லும் சாலை பல் வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப் படுகிறது. மேலும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சாலை குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பழுதடைந்த சாலை பெயர்ந்து கிடக்கிறது. பொதுமக்கள், தொழி லாளர்கள் அவசர தேவைகளுக்கு நடந்து செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் தண்ணீரை கடந்து செல்லும் வரை நீண்ட தூரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள் ளது. இல்லையென்றால் வாகனங்கள் சேற்று நீரை வாரி இறைத்து சென்று விடுகிறது. இத னால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொது மக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, குண்டும், குழியுமான சாலையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டி கள் வலியுறுத்தி உள்ளனர்.