உதகை, ஏப்.11- கோடை சீசன் துவங்கியுள்ள நிலை யில் உதகை நகர் சாலைகளில் சுற்றி திரி யும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிய டைந்து வருவது மட்டுமின்றி, விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா நகரமான நீல கிரி மாவட்டம், உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணி கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலா னோர் தங்களது சொந்த வாகனங்களில் வந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். நகரில் உள்ள சாலைகள் மிக குறுகலான சாலை களாக உள்ள நிலையில், வாகன போக் குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற் பட்டு வருகிறது. இச்சூழலில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடு, குதிரை போன்ற கால்நடைகள் உதகை நகரின் சாலை களில் சுற்றி திரிந்து வருவது மட்டு மின்றி, சாலைகளின் நடுவே நின்றும், படுத்து கொண்டும் இருப்பதால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், நகராட்சி நிர்வா கம் சாலைகளில் சுற்றி திரியும் கால் நடைகளின் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது அபராதம் விதித்தாலும், கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரி வது தொடர் கதையாகவே உள்ளது. தற்போது கோடை சீசன் துவங்கி யுள்ள நிலையில், உதகை நகரில் சுற் றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக ரித்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடை பிராணிகளின் உரி மையாளர்களுக்கு அபராதம் விதிப்ப தோடு, ஆண்டுதோறும் நடைபெறும் கால்நடைகளுக்கு வழங்கப்படும் அடையாளக் குறியீடு முகாமின் மூலம் கால்நடை உரிமையாளர்களுக்கு எச்ச ரிக்கை விட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.