ஈரோடு, நவ.23- இந்தியாவின் கடைக்கோடி பகுதியில் வளர்ந்துள்ள ரிக் தொழில் நுட்பமும், பொறி யியல் அறிவும், வடமாநிலத்தின் இமயமலை அடிவாரத்தில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க உதவி இருக்கிறது என பிஆர்டி நிறுவனங்க ளின் மேலாண்மை இயக்குநர் பெருமிதம் தெரிவித்தார். திருச்செங்கோட்டில் பிஆர்டி நிறுவனங்க ளின் மேலாண்மை இயக்குநர் கூறுகையில், ஆறு, ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீராதாரங் கள் நமது பாரம்பரியமானவை. ஆழ்துளை கிணறு தொழில்நுட்பம் அறிமுகமாகி வளர்ந் ததால். இத்தொழிலுக்கு பெயர் பெற்ற நிறு வனம் பிஆர்டி. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி பகுதியில் அமைக்கப் பட்ட சுரங்கப்பாதையில் மண் சரிவு ஏற்பட் டது. இதில் 40க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுரங்கத்தினுள் சிக்கியிருக்கும் தொழிலா ளர்களை மீட்க பிஆர்டி நிறுவன தயாரிப்பை பயன்படுத்தும் நிறுவனத்தினை அணுகினர். அதன்மூலம் 360 டிகிரியிலும் சிறப்பாக செயல்படும் இயந்திம் பயன்படுத்தப்பட்டது. 6 இன்ச் அகலத்தில் சுமார் 110 அடி ஆழத் தில் துளையமைக்கப்பட்டது. அவ்வாறு துளை அமைத்து செல்லும்போது கேசிங் பைப்பை யும் உடன் அனுப்பும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் எந்தச் சரிவும் ஏற்படாமல் ஆழத்தில் சிக்கி இருந்த வர்களை எட்டினர். இவ்வாறு 6 இன்ச் குழாய் வழியே ஆக்சிஜன், மருந்து, உணவு மற்றும் குடிநீர் அனுப்ப்பட்டு வருகிறது என அப்பகுதி யில் உள்ள தரணி ஜியொ டெக் இயக்குநர் தெரிவித்தார். அப்போது உடனிருந்த பிஆர்டி நிறுவ னங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தா மன் கூறியதாவது, சுரங்கப்பாதை அமைக் கும் பணியில், திடீரென சரிவு ஏற்பட்டதால் அதில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட னர். ஒரு மீட்டர் சுற்றளவு கொண்ட துளை அமைத்தால் தான் உள்ளிருப்பவர்களை மீட்க முடியும். அதற்கு கொஞ்சம் கால தாமதம் ஆகும். அதுவரை உள்ளே இருப்ப வர்களுக்கு முதற்கட்டமாக உணவு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். இந்தியாவின் கடைக்கோடி பகுதியில் வளர்ந்துள்ள ரிக் தொழில் நுட்பமும், ரிக் பொறியியல் அறிவும், வடமாநிலத்தின் இமய மலை அடிவாரத்தில் ஏற்பட்ட பாதிப்பை சீர மைக்க உதவி இருக்கிறது என்பது பெரு மைக்குரியது, என்றார்.