districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரிசி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்  

சேலம், ஜூலை 17- ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து அரிசி  உற்பத்தியாளர்கள், அரிசி வியாபாரிகள் ஞாயிறன்று சேலத் தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.   அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மீது ஜிஎஸ்டி வரி  விதித்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய அள வில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு ஆலை உரிமையாளர் கள் ஒருநாள் அடையாள ஆலை மற்றும் அரிசி கடையடைப்பு  போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன்ஒருபகுதியாக சேலத்தில் ஞாயிறன்று அரிசி கடை கள் மற்றும் 500க்கு மேற்பட்ட அரிசி ஆலைகள் அடைக்கப் பட்டு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.  சேலம்  செவ்வாய்பேட்டை லீ பஜார் பழைய மார்க்கெட் தெரு உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள் ளது. இந்த ஒரு நாள் கடையடைப்பு காரணமாக பலநூறு கோடி  ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரிசி கடை உரி மையாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் தெரிவித் துள்ளனர்.  இதேபோன்று ஈரோடு மாவட்டத்தில்  150 அரிசி ஆலைகள்  வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதே போல  400-க்கும் மேற்பட்ட அரிசி விற்பனை கடைகள் பூட்டப்பட்டி ருந்தது.

ஆற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழப்பு

உதகை, ஜூலை 17- உதகை அருகே கல்லட்டி ஆற்றுக்குள் தவறி விழுந்த இளம் பெண் என்ஜினியரை தீயணைப்புத் துறையினர் மீட்ட னர்.  ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கட்டா வினிதா  சவுத்ரி (26). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள  ஐடி நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந் நிலையில் கட்டா வினிதா சவுத்ரி தன்னுடன் பணியாற்றும் நண் பர்கள் 9 பேருடன் சேர்ந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற் றுலா வந்துள்ளார். தொடர்ந்து உதகையில், பல்வேறு இடங் களை சுற்றி பார்த்தவர்கள் கல்லட்டி பகுதியில் உள்ள ஒரு  தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் சனியன்று மாலை கல்லட்டி சாலையில் 20  ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள ஆற்றின்  கரையில் அனைவரும் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வினிதா சவுத்ரி கல்லட்டி ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று ஆற்றில் விழுந்த இளம் பெண்ணை தீவிரமாக தேடி  வந்தனர். சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருப்பதால், தேடுதல் பணியில் சிக்கல் இருந்ததால், ஞாயிறன்றும் தொடர்ந்த தேடுதல் பணி நடை பெற்று வந்தது. இந்நிலையில், கள்ளட்டி ஆற்றில் பெண்ணின்  உடல் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டு உதகை அரசு மருத்து வமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட் டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து உதகை காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

கோவை: 7 நீட் தேர்வு மையங்களில் 5400 தேர்வு எழுதினர்

கோவை, ஜூலை 17- கோவையில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில்  5ஆயிரத்து 400 பேர் தேர்வு எழுதினர்.  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் என்ற நுழைவுத்தேர்வு மத்திய அரசின் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா தொற்று கார ணமாக கடந்த ஆண்டு தாமதமாக நாடு முழுவதும் நீட் தேர்வு  ஞாயிறன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடை பெற்றது.  கோவை மாவட்டத்தில் 5400 மாணவ-மாணவிகள்  நீட் தேர்வை எழுதினர். இதில், கோவை சவுரி பாளையம் கேந்தி ரிய வித்யாலயா பள்ளி, கே.ஐ.டி, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி, ஆதித்யா கல்லூரி, ரத்னவேல் சுப்பிர மணியம் கல்லூரி, கற்பகம் அகாடமி உள்ளிட்ட மையங்களில்  தேர்வு எழுதினர்.கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறை களை பின்பற்றி நீட் தேர்வு நடைபெறுகிறது.  கூட்டம் கூடுவதை தவிர்க்க ஹால் டிக்கெட்டில் குறிப்பிட் டுள்ள நேரப்படி தேர்வு அறைக்கு வர அறிவுறுத்தப்பட்டது. முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்து வரக் கூடாது என்றும் சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர  வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து தேர்வு  மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.

தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடிய வாலிபர் கைது

 தாராபுரம், ஜூலை 17-  திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் கடந்த சில நாட்களாக விலை உயர்ந்த வாகனங்கள் திரு டப்பட்டு வந்தது. இது குறித்த புகார்கள் தாராபுரம் குற்றப் பிரிவு காவல்துறைக்கு வந்தன. இதைத்தொடர்ந்து  காவல் துறை பல்வேறு யூகங்கள் வகுத்து குற்றவாளியைத் தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று தளவாய்  பட்டணம் சாலை பெரியார் சிலை அருகே மரக்கடை நடத்தி  வரும் மரக்கடை கணேஷ் என்பவர் கடை முன்பு தனது  இருசக் கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போன தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தாராபு ரம் குற்றபிரிவு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமாரி டம் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறை பழனிரோடு - ஒட்டன்சத்திரம் சாலை, கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கு தக வல் அளித்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் அருகே உள்ள காரியம்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வாலிபர் ஒருவர் வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து கள்ளிமந்தியம் காவல்துறை சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து விசாரித்ததில் அவர்  தாராபுரம் பகுதியில் இருந்து வாகனத்தைத் திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். உடனே கள்ளிமந்தையம்  காவல்துறை தாராபுரம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த னர். தாராபுரம் காவல்துறை சம்பந்தப்பட்ட இளைஞரை தாராபுரம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம் செல்லாண்டியம்மன் கோவில் தெரு வைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஆனந்த மணி என்ற ஆனந்த ராஜ் (25) என்பதும் தாராபுரம் அலங்கியம்  பகுதிகளிலிருந்து 2 மற்றும் 4 சக்கர வாகனங்களைத் திருடியதை ஒப்புக்கொண் டார். அவரிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, தாரா புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2.82 கோடிக்குப் பருத்தி ஏலம்

தாராபுரம், ஜூலை 17-  மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 2.82  கோடிக்குப் பருத்தி ஏலம் போனது.  திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்ப னைகூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறை முக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி,  திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த  1205 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காகக் கொண்டு  வந்திருந்தனர். அதேபோல் பருத்தியைக் கொள்முதல் செய் யத் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட் டங்களைச் சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற் றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயி ரத்து 699 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 7ஆயிரத்து 150  க்கும், சராசரி விலையாக ரூ.8ஆயிரத்து 550க்கும் விலை  போனது. மொத்தம் 10277 மூட்டைகள் 3 ஆயிரத்து 373 குவிண் டால் பருத்தி ரூ. 2 கோடியே 81 லட்சத்து 64 ஆயிரத்து 96க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் 23 வணிகர்கள்  பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பா ளர் சிவக்குமார் செய்திருந்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் 3900 பேர் நீட் எழுதினர்

திருப்பூர், ஜூலை 17- பிளஸ் 2 முடித்தவர்கள் மருத்துவ படிப்புக்கான ’நீட்’  நுழைவுத்தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 3,900 மாண வர்கள் தேர்வெழுத விண் ணப்பித்துள்ளனர்.  இதில் 2861 மாணவர்கள்  நீட் தேர்வு எழுதினர்.255 பேர்  தேர்வு எழுத வரவில்லை. திருப்பூரில் திருமுருகன் பூண்டி ஏவிபி கலை அறிவியல் கல்லூரி, பெருமாநல்லூர் கே.எம்.சி  பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளி,  உடுமலை ஜிவிஜி விசா லாட்சி மகளிர் கல்லூரி, விஜ யமங்கலம் சசூரி பொறியி யல் கல்லூரி மற்றும் கோபி செட்டிபாளையம்  கோபி கலை அறிவியல் கல்லூரி என ஆறு இடங்களில் தேர்வு  மையங்கள் அமைக்கப்பட் டன. கோபிசெட்டிபாளையம் தேர்வு மையம், திருப்பூர்  மண்டலத்தின் கீழ் வருகிறது.  ஆகிய மையங்களில் இத் தேர்வு நடைபெற்றது.

எளிய மக்களின் வீடுகளை அகற்றும் நடவடிக்கையை கைவிடுக 

நசியனூர் மக்கள் அமைச்சரிடம் முறையீடு

ஈரோடு, ஜுலை 17-  ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் எளிய மக்க ளின் குடிசைகளை ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் அகற்றும்  நடவடிக்கையை கைவிட வேண்டும் என நசியனூர் கிராம மக் கள் வீட்டு வசதி வாரிய அமைச்சரிடம் கோரிக்கை மனுவினை  அளித்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தில் உள்ள  புறம் போக்கு நிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த  மக்கள் 20க்கும் மேற்பட்ட குடிசை அமைத்து வசித்து வருகின் றனர். இந்த குடிசைகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம்  சாலை, தெருவிளக்கு, மின்சாரம், குடிநீர் வசதி பெற்றுள்ள னர். ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற்றுள்ள னர்.  இம்மக்களின் குடியிருப்பாக மாறி கடந்த 50 ஆண்டுகளாக  வசித்து வரும் இடம் இட்டேரி, வண்டிப்பாதை பெருமாள் என கிராம கணக்கில் உள்ளது. இதனை ஆக்கிரமிப்பு என  கூறப்பட்டது. இதனை எதிர்த்து அரசுக்கு முறையீடு செய்த னர். இதில், அரசு இறுதி முடிவு எடுக்கும் வரை ஆக்கிரமிப்பு களை அகற்றக்கூடாது என நீதிமன்ற தீர்ப்புகளை அம்மக்கள்  பெற்றுள்ளனர்.  இந்நிலையில் 1905ஆம் வருடத்திய தமிழ்நாடு நில ஆக்கிர மிப்பு சட்டப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற மிகவும் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது இம்மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனைய டுத்து தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச் சர் சு.முத்துசாமியை சந்தித்து எளிய மக்களின் வாழ்விடங் களை ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் அகற்றக்கூடாது என  மனு அளித்தனர்.

ஏரியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் நீர்நிலைகள் நஞ்சாகும் அபாயம்

தருமபுரி, ஜூலை 17- பாகல் பட்டி ஏரியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்க ளால் நீர்நிலைகள்‌நஞ்சாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பாகல ஹள்ளி ஊராட்சியில் ஐந்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.  மழை காலங்களில் இந்த அனைத்து ஏரிகளும் நிரம்பி நிலத்தடி  நீர் மட்டம் உயரும். இதனால் இப்பகுதி சுற்றுவட்டாரத்தில் கிணற்றுப் பாசனம், ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய் வதற்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த ஏரிகள் அமைந்துள் ளன.  இந்நிலையில், பாகல்பட்டி பகுதியில் அமைந்துள்ள சிக்கண்ண கவுண்டன் ஏரியில் தனியார் பிளாஸ்டிக் தயாரிக் கும் தொழிற்சாலையில் இருந்து லாரி மூலம் மக்கும் தன்மை  இல்லாத பிளாஸ்டிக் குப்பைகளை மூட்டை மூட்டையாக டன்  கணக்கில் எடுத்து வந்து ஏரிக்கரை மற்றும் ஏரி பகுதிகளில்  கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வரும் ஆடுகள்  மற்றும் மாடுகள் பொருட்களோடு சேர்த்து பிளாஸ்டிக் கழிவுக ளையும் உண்பதால் அவைகள் பாதிக்கப்படுகிறது. ஏரியில் ஊரக வளர்ச்சித்துறை சங்கம் வலியுறுத்தல் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவது குறித்து பொது மக்களின் எதிர்ப்பு வலுத்தபோது, இரவோடு இரவாக ஏரிக்க ரையில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அருகில் இருந்த  ஊராட்சிக்கு சொந்தமான பயன்பாடு இல்லாத பழைய  கிணற்றில் ஜேசிபி இயந்திரம் மூலம் வாரி கொட்டியுள்ள னர். மேலும், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றவர் கண்களில் படாதவாறு இருப்பதற்காக குப்பைகளின் மீது களிமண்ணை  கொட்டி மறைத்துள்ளனர். இந்த கிணறு சுமார் 40 அடி ஆழம் வரை உள்ளது. வரும்  மாதங்களில் மழை பெய்து ஏரி நிரம்பும் பட்சத்தில் அதனை ஒட்டி அமைந்துள்ள இந்த கிணறும் முழுமையாக நீர் நிரம்பும். அப்பொழுது மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் கிணற்றில் இருப்பதால் ஏரியில் நீர் நிரம்பும் போது ஒட்டுமொத்த தண்ணீ ரும் நஞ்சாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த  ஏரியை சுற்றியுள்ள நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாய மும் உள்ளது.  தமிழக அரசு ஏற்கனவே ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி களுக்கு தடை விதித்துள்ள நிலையில், இப்பகுதியில் டன்  கணக்கில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை கண்டு  பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்துள் ளனர்.  ஏரி பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்ப டுத்தி விட்டு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இது போன்ற நீர் நிலைகளை நஞ்சாக்கும் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடுமையான நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

பதவி உயர்வில் அரசின்  விதிமுறைகளை கடைபிடித்திடுக

ஊரக வளர்ச்சித்துறை சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 17- பதவி உயர்வு, பணியிட மாறுதல்களில் அரசின் விதிமுறை களை கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத் தின் மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரி ஆர்டி நகர் சங்க  அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  மாவட்ட செய லாளர்  சங்கர், மாவட்ட பொருளாளர்  சர்வோத்தமன் அறிக்கை  வாசித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் இளங்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஒருங்கிணைப்பாளர் விமலன் மற்றும் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் வாழ்த்துரை வழங்கினர். இதில், தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச் சித்துறை அலுவலர்களின் பதவி உயர்வு, பணியிட மாறுதல்  ஆகியவற்றை அரசு விதிமுறைகளுக்கேற்ப உரிய நேரத்தில் வழங்கவேண்டும். பொறியாளர் பிரிவு அலுவலர்களுக்கான விருப்ப மாறுதல்களை உடன் வழங்கவேண்டும். சில அலுவ லர்கள் நீண்ட தூர பணியிடங்களுக்கு மாற்றப்பட்டதை அவர வர் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு பரிசீலித்து வசிப்பிடங் களுக்கு அருகாமை வட்டாரங்களில் நியமிக்கவேண்டும். இரவு காவலர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட காலி இடங்களை நிரப்பிடவும், ஏரியூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி  ஆகிய அலுவலகங்களுக்கு அலுவலர்கள் சிரமமின்றி பய ணிக்க காலை மாலை அலுவலக நேரத்தில் போதிய பேருந் துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  மேலும், ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் சிவகங்கை நகரில் நடை பெற உள்ள சங்கத்தின்10 ஆவது மாநில மாநாட்டிற்கு பெரும்  திரளாக ஊழியர்கள் கலந்து கொள்ள முயற்சி மேற்கொள்வது  என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட துணைத்தலைவர் விஜயரங்கன் நன்றி கூறினார்.

மழைநீரை அகற்ற சூப்பர் சக்கர் வாகனம்

கோவை, ஜூலை 17- கோவை மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறிந்து மழைநீரை அகற்ற சூப்பர் சக்கர் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளன என அதிகாரிகள் தகவல்  தெரிவித்தனர்.  மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை  சரி செய்வதற்கும், கழிவு களை தூர்வாருவதற்கும் அதிக திறன் கொண்ட கழிவு நீர் உந்து மற்றும் அடைப்பு களை சரி செய்ய சூப்பர் சக்கர் வாகனம் கோவை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டது. மழை பெய்யும் போது அதிக அளவில் மழை  நீர் தேங்கும் இடங்களில் உட னடியாக தேவைக்காக மழை நீரை அகற்ற சூப்பர் சக்கர் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என் றார்.

கோவை - 500 நியாய விலை கடைகள் நவீனப்படுத்தப்படுகிறது

கோவை, ஜூலை 17-  தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகள் நவீனப்படுத்தப் பட்டு ஸ்மார்ட் கடைகளாக மாற்ற திட் டமிடப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சி யாக கோவை மாவட்டத்தில் 500 நியா யவிலைக்கடைகள் ஸ்மார்ட் கடைக ளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.  தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 786 நியாய விலைக்கடைகள் உள் ளன. இதில் 2 கோடியே 23 லட்சத்து  18 ஆயிரத்து 917 குடும்ப அட்டைகள்  உள்ளன. 6 கோடியே 97 லட்சத்து 41 ஆயிரத்து 319 வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் கோவை மாவட் டத்தில் 1401 கடைகள் உள்ளன. 11  லட்சத்து 33 ஆயிரத்து 511 குடும்ப  அட்டைகள் உள்ளன. 33 லட்சத்து 50 ஆயிரத்து 869 வாடிக்கையாளர்கள் உள்ளனர். தமிழக முதல்வரின் உத்தரவுப் படி கோவையில் மாதிரி ரேசன் கடை கள் விரைவில் அமைக்கப்பட உள் ளன.  இதன்படி கோவை மாவட்டத் தில் உள்ள 1401 நியாயவிலைக்கடை களில் மாதிரி கடைகளாக மாற்ற சாத்தியகுறு உள்ள கடைகள் குறித்து  அன்மையில் மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல்  கட்டமாக 500 கடைகள் மாதிரி கடை களாக மாற்ற வாய்ப்புள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வழங்கல்  துறை அதிகாரிகள் கூறுகையில், மக் களை கவரும் வகையில் நியாய விலை கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளது. அதன்படி கோவை மாவட் டத்தில் உள்ள அனைத்து கடைகளி லும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், முதல் கட்டமாக 500 கடைகள்  மார்டன் கடைகளாக மாற்ற திட்டமி டப்பட்டுள்ளது. தற்போது உள்ள கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் எண்டரி போடப்பட்டு இலவச அரிசி,  மானிய விலையில் சர்க்கரை, பாமா யில், பருப்பு, கோதுமை போன்றவை கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாதிரி கடைகளாக மாற்றம் செய் யப்படும் போது சூப்பர் மார்க்கெட்டு களில் உள்ளது போல் பொருட்கள்  பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக் கும். தற்போது வழங்கப்படும் பொருட்களை காட்டிலும் மளிகை  பொருட்கள் அனைத்தும் வைக்கப் பட்டிருக்கும். மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து  கொண்டு ரேஷன் கடை விற்பனையா ளரிடம் வர வேண்டும். அவர் ஸ்மார்ட்  கார்டு மூலம் எண்டரி போடப்பட்டு, விரல் ரேகை பதிவு பெறப்பட்டு இல வச அரிசி மற்றும் பொருட்களின் விலை பட்டியலுடன் ரசீது கொடுப் பார். இதில் மானிய விலை பொருட்க ளின் விலை குறித்து மக்களுக்கு அதில் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் பணம் செலுத்தி பொருட்களை பெற்று செல்லலாம். தற்போது உள்ள நடைமுறையில் இருந்து பொருட்களை விநியோகம் செய்வதில் மட்டுமே மாறுபாடு ஏற் பாடும். இலவச அரிசி, மானிய விலை  பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்றனர்.

பெரியார் பல்கலை துணை வேந்தர் மீது விசிக புகார்

சேலம், ஜூலை 17- சேலம் பெரியார் பல்க லைக்கழக வினாத்தாளில் சாதிய ரீதியான வினா, துணை வேந்தர் உள்ளிட்ட ஆசிரியர் குழுக்கள் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்  என காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் விசிக புகார் மனு அளித்துள்ளது. சாதிய வன்மத்தை காட் டும் துணைவேந்தர் ஜெகநா தன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது.