districts

img

மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் ரோடோடென்ரன்

உதகை, பிப்.1- தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் ரோடோடென்ரன் மலரைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைகளும், கிழக்கு தொடர்ச்சி மலைகளும் சந் திக்கும் இடமாக தொட்டபெட்டா மலைச் சிகரம் உள்ளது. இந்த மலையில் பல் வேறு அரிய வகை தாவரங்கள், மலர் கள், மூலிகைகள் மற்றும் மரங்கள் உள் ளன. குறிப்பாக, ரோடோடென்ரன் மரங் கள் அதிகளவு காணப்படுகிறது. குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசம் மற் றும் நீலகிரியில் மட்டுமே இந்த வகை மரங்கள் காணப்படுகிறது. மிகவும் உய ரம் குறைந்த, அதிக கிளைகளை கொண்ட இந்த மரத்தில் ஆண்டுதோ றும் பனிக்காலமான டிசம்பர் மாதங்க ளில் சிவப்பு நிற ரோஜா மலரை போன்ற மலர்கள் பூக்கும். தற்போது கால மாற் றத்தால் ஜனவரி மாதம் வரை இந்த பூக் கள் பூக்கிறது. அடர் சிவப்பு மற்றும் சில இடங்களில வெளிர் சிவப்பு நிறத்தில் இந்த மலர்கள் காணப்படும். பார்ப்ப தற்கு ரோஜா மலர்களை போலவே காட்சியளிக்கும். இதனால் பெரும்பா லான சுற்றுலா பயணிகள் இதனை ரோஜா மலர் என நினைத்து அருகில் சென்று பார்த்த பின்னரே ரோடோடென் ரன் மலர் என தெரிய வரும். இது நேபாளத்தின் தேசிய மலர்.  அமெரிக்காவில் வாஷிங்டன் மற்றும் மேற்கு வர்ஜீனியா மாநில மலர். இந்தி யாவில் நாகாலாந்து மாநில மலர். சீனா வில் ஜியாங்சி மாகாண மலர். இந்தியா வில் சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் மாநில மரம். இம்மரங்களின் பெரும்பா லான இனங்கள் பிரகாசமான வண்ண மலர்களைக் கொண்டுள்ளன. அவை குளிர்காலத்தின் பிற்பகுதியிலிருந்து கோடையின் ஆரம்பம் வரை பூக்கும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொட்ட பெட்டா, அவலாஞ்சி, அப்பர்பவானி, வெஸ்டர்ன்கேட்ச்மென்ட், பங்கிதபால், சைலன்வேலி மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் உள்ள இந்த மரங்களில் ரோடோடென்ரன் மலர்கள் அதிகளவு பூத்துள்ளது. இதனை சுற் றுலா பயணிகள் கண்டு ரசித்து செல் கின்றனர்.