சேலம், பிப்.19- மேட்டூரில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார் பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அண்மையில் 152, 139, 2, ஆகிய மூன்று அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முழுவ தும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணி நிரந்தரம் என்பதே இல்லாத நிலை ஏற்படும். காலியாக உள்ள பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாது. தூய்மை பணி, வரி வசூல், அலுவலக நிர்வாக பணிகள் அனைத்தும் தனியார் ஒப்பந்தங்கள் மூலமே மேற்கொள்ளப்படும். இது சமூகநீதி கோட்பாட்டிற்கு எதிரா னதாகும். எனவே உள்ளாட்சி பணியாளர்கள் நலனுக்கு எதி ரான அரசாணைகளை திரும்பப்பெற வேண்டும் என வலியு றுத்தி சிஐடியு மேட்டூர் நகர கிளை சார்பில் பிரச்சார இயக்கம் சின்ன பார்க் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு தலைவர் வீ.இளங்கோ தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் து.சிங்கராயன் துவக்கி வைத் தார். இதில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தேவி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மேட்டூர் மின் பகிர்மான வட்ட தலைவர் சுந்தரராஜன், சிஐடியு மேட்டூர் கிளை செயலா ளர் செ.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.