சேலம், மார்ச் 9- 4 ஆண்டுகளாக வெளியிடப் படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வலியுறுத்தி மார்ச் 23 ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர் சங்கம் அறிவித்துள்ளது. 4 ஆண்டுகளாக வெளியிடப் படாமல் உள்ள துணை ஆட்சியர் பட் டியலை உடனடியாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யில் துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பட்டியல்கள் திருத்தத்தின் காரண மாக பணியிறக்கம் செய்யப்பட்ட அலுவலர்களின் பாதிப்புகளை தவிர்த்து, பதவி உயர்வினை உறுதி செய்து உரிய ஆணைகளை வெளி யிட வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு உடனடியாக சங்க நிர்வாகி களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். இதனை மறுக் கும் பட்சத்தில் மார்ச் 23 ஆம் தேதி யன்று மாநிலம் முழுவதும் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெ றும் என தெரிவித்து தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர்கள் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பிரபு தலைமை ஏற்றார். மாநில துணைத்தலைவர் வே.அர்த்தநாரி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். இதில், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முருக பெருமாள், நிர்வாகிகள் ஜாகீர் உசேன், அருள் பிரகாஷ், அகிலன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.