உடுமலை, செப். 20 - உடுமலையில் வருவாய்துறை ஊழியர்கள் தங்களின் நியாமான கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தும் வகையில் அட்டை அணிந்து வேலை செய்தனர். உடுமலை கோட்டாட்சியர் அலுவலகம், உடுமலை வட் டாட்சியர் அலுவலகம் மற்றும் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் புதன்கிழமை தமிழக அரசுக்கு தங்களின் கோரிக்கையான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான கூடுதல் பணியிடங் களை வழங்க வேண்டும். அரசு பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ப்பட்ட கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் அட்டைகளை அணிந்து வேலை செய்தார்கள்.