நாமக்கல், அக். 28- விதிமுறைகளை மீறி செயல்படும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள் ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யம் அருகே உள்ள வட்டமலை பகுதி யைச் சேர்ந்த ஞானசேகர் நுண் நிதி (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்களி டம் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள் ளார். வாங்கிய கடனை தவனை முறை யில் செலுத்தி வந்த இவர், கடந்த தவணை செலுத்த இயலாமல் போயுள் ளது. இதனை ஏற்காத நுண் நிதி நிறுவன ஊழியர்கள், ஞானசேகர் குடும்பத்தி னரை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால், மனம் உடைந்த ஞானசேகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக் கிட்டு தற்கொலை செய்து கொண் டார். தான் தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணத்தையும் கடிதமாக எழுதி வைத்துள்ளார். இதில், கடன் தொகை செலுத்த முடியாதது குறித் தும், நுண் நிதி நிறுவனங்கள் தரக்குறை வாக பேசி அழுத்தம் கொடுத்ததும் தற் கொலைக்கு காரணம் என எழுதியுள் ளார். மேலும், என் மரணத்திற்கு பிறகு எனது மனைவி, மகன், மகள் ஆகி யோரை மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் பாதுகாக்க வேண்டும் என கடி தத்தில் குறிப்பிட்டுள்ளார். நுண் நிதி நிறுவனத்தால் விசைத் தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குமாரபாளையம் பகுதியில் உள்ள விசைத்தறி தொழி லாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. தரக்குறைவாக பேசி அடாவடியில் ஈடுபட்ட நுண்நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது. இதே போன்று, உயிரிழந்த ஞானசேகரனின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு, தற்கொலை செய்து கொண்ட விசைத்தறி தொழிலாளியின் இறுதி அடக்கம் நடைபெற்றது. இதனையடுத்து, சனியன்று குமார பாளையம் வட்டாட்சியர் அலுவலகத் தில் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் உயிரிழந்த ஞானசேகர் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் உதவித்தொகை கிடைக்க பரிந் துரை செய்வதாகவும், விதிமுறைகளை மீறி நிதி நிறுவனங்கள் அளவுக்கு அதி கமாக கடன் கொடுப்பது தவறு. மேலும் கொடுத்த கடனை வசூலிக்க, தகாத வார்த்தைகள் திட்டுவது, மேலும் ரிசர்வ் வங்கி அறிவித்த காலங் களை மீறி நள்ளிரவு நேரங்களில் சென்று வசூல் செய்தால், நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் எச்சரிக்கை செய்தார். இந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் காவல்துறையி னர் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுநல அமைப்பினர் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற் றனர்.