திருப்பூர், டிச.5- காங்கேயம் திருப்பூர் சாலையில் செயல்பட்டு வந்த உணவகம் ஒரு வாரத் திற்கு முன்பு இந்து முன்னணி கும்ப லால் தாக்கப்பட்டு மூடப்பட்டது. திங்க ளன்று அதனை காங்கேயம் அமைதிக் கான ஒருங்கிணைப்பு குழுவினர் மீண் டும் திறந்து வைத்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்தவர் கீதா (32). இவர் திருப்பூர் சாலை யோரம் தள்ளுவண்டிக்க டையில் உணவகம் நடத்தி வருகிறார். இதில், இந்து முன்னணியைச் சேர்ந்த நகரச் செயலாளர் நாகராஜ் சில வாரங்க ளுக்கு முன்பு ஆப்பாயில் சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் மிரட்டல் விடுதுள்ளார். இதை முன்பகையாக கொண்டு அவ்வப்போது கீதாவிடம் நாகராஜ்தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் னர் கடந்த 26 ஆம் தேதி இரவு இந்து முன் னணி மாவட்டச் செயலாளர் சதீஸ் தலை மையில் நகரச்செயலாளர் நாகராஜ் உள் ளிட்ட 10க்கும் மேற்பட்ட இந்து முன்ன ணியினர், கோயில் அருகே ஆம்லெட் போடக் கூடாது என கீதாவை தாக்கி யுள்ளனர். இதையடுத்து கீதா அளித்த புகாரின் பேரில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சதீஸ், நகரச் செய லாளர் நாகராஜ் மீது பெண்கள் வன்கொ டுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரச்சனை ஏற்பட்ட கடந்த 26ஆம் தேதி முதல் கீதாவின் சாலையோர கடையை சில நாட்க ளுக்கு மூடும்படி போலீஸ் தரப்பிலி ருந்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து கடந்த டிச.1 ஆம் தேதி காங்கேயம் அமைதிக்கான ஒருங்கி ணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், டிச.4 ஆம் தேதி பாதிக்கப்பட்டவ ரின் கடையை மீண்டும் அதே இடத் தில் திறந்து வைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி திங்களன்று காங்கேயம் திருப்பூர் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திருவேங்கடாமி தள்ளுவண்டி கடையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தை கள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன் னணி, பெரியாரின் பெண்கள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.