திருப்பூர், ஜூன் 7 - திருப்பூர் வெங்கமேடு பகுதியில் தனியார் சாய ஆலையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலை யில் அப்பகுதியில் குடியிருக்கும் சிறுவர், சிறுமி யருக்கு தொடர் வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணை யர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதியில் நேர டியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் அங்கேரிபாளையம் வெங்கமேடு பகுதியில் கே.பி.ஆர். நிட்டிங் மூன்றாவது அலகு உள்ளது. இங்கு சாயமேற்றுதல் மற்றும் காம் பேக்டிங் பிரிவு செயல்பட்டு வருகிறது. செவ்வா யன்று இரவு இந்த நிறுவனத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் இந்த ஆலைக்கு அருகாமை பகுதியில் குடியிருப்புக ளில் வசிக்கக்கூடிய சிறுவர், சிறுமியருக்கு குமட் டல், வாந்தி ஏற்பட்டுள்ளது. பலர் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளனர். அதேபோல் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த விபரம் தெரிந்தவுடன் மாநகராட்சி நகர் நல மையத்தின் மூலம் அந்த குடியிருப்புக்கு மருத்துவப் பணியாளர்கள் வந்து சிறுவர், பெரி யோர் என அனைவருக்கும் மருத்துவப் பரிசோ தனை மேற்கொண்டனர். இப்பகுதி பெண்கள் கூறுகையில், 40க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் வாந்தி, சுவாசப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த னர். நகர் நலப் பணியாளர்கள் சோதனை செய்து சிகிச்சை தேவைப்படுவோரை மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் நேரடியாக இங்கு வருகை தந்து ஆய்வு செய்தார். மருத்துவப் பரிசோதனை செய்ததில் 17 பேர் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். அதேபோல் மாசு கட்டுப்பாட்டு வாரியம், துர் நாற்றம் வெளிவந்த தனியார் ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டிருப்ப தாகவும் ஆணையர் பவன்குமார் தெரிவித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த ஆலையை ஆய்வு செய்து கொடுக்கும் அறிக் கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அந்த ஆலை மீது தேவைப்படும் மேல் நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் அவர் கூறினார். துர்நாற்றம் வீசிய பிரச்சனை காரணமாக சிறுவர்களுக்கு உபாதைகள் ஏற்பட்டிருந்தா லும், அச்சப்படும் அளவுக்கு ஆபத்தான பாதிப் புகள் இல்லை.
நீர்ச்சத்து குறைவாக இருந்த வர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர் என்றும் அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருப் பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் இப்பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்தார். அதிக உபாதை இருந்த சிறுவர்களை தனது வாகனத்தில் மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதேபோல் வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. என்.விஜயகுமாரும் நேரில் வந்து பார்வை யிட்டார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு தனியார் ஆலையிலும் ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆலையில் இருந்த தண்ணீர் மற்றும் கழிவு நீரை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். மறு உத்தரவு வரும் வரை இங்கு இயந்திரங்களை இயக்காமல் நிறுத்தி வைக்கும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் இப்பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத் தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவை யான உதவி செய்தார். மேலும் மார்க்சிஸ்ட் கட்சி யின் மூத்த உறுப்பினர்களான முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன், ஆர்.என். ரத்தினசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன் ஆகியோரும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.