districts

img

அரூர் பேருந்து நிலையத்தை சீரமைக்கக் கோரி தீர்மானம்

தருமபுரி, ஏப்.9-  அரூர் பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் சீர மைப்பு செய்ய வேண்டும் என பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரூர் பேரூராட்சியின் முதலாவது வார்டு உறுப்பி னர்கள் கூட்டமானது பேரூராட்சியின் தலைவர் இந்தி ராணி தனபால் தலைமையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வரு மாறு, அரூர் பேருந்து நிலையம் சுமார் 1.50 ஏக்கர் பரப்ப ளவு கொண்டதாகும். இந்த பேருந்து நிலையத்தினை நவீன வசதிகளுடன் சீரமைப்பு செய்தல் வேண்டும். அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டு களிலும் கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். தெருவிளக்குகள் அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்து தல், தெருச்சாலைகளை சீரமைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், செயல் அலுவலர் ஆர்.கலைராணி, பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா து.தனபால், வார்டு உறுப்பினர் முல்லை ரவி மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்துகொண்டனர்.