சேலம், நவ.21 - நூறுநாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் இடைக்கமிட்டிகள் மா நாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கம் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் கொளத்தூர், ஓமலூர், ஆத்தூர் தலைவாசல், பனமரத்துப்பட்டி ஆகிய ஒன்றிய குழுக்களின் இடைக்கமிட்டி அளவிலான மாநாடுகள் நடை பெற்றது. மேட்டூர் கொளத்தூரில் முனி யம்மாள் தலைமையிலும், ஓமலூர் பகுதியில் செல்வராஜ் தலைமை யிலும், ஆத்தூர் தலைவாசல் பகுதி யில் மாரிமுத்து தலைமையிலும், பனம ரத்து பட்டி பகுதியில் ஒன்றிய செய லாளர் சாமியப்பன் தலைமையிலும் மாநாடுகள் நடைபெற்றது. இதில், 100 நாள் வேலை திட்டத் தை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண் டும். 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும், வீடு இல்லாத விவசாய தொழிலா ளர்களுக்கு வீடு வழங்க வேண்டும். இல வச வீட்டு மனை வழங்க மற்றும் பட்டா இல்லாத விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும், 55 வயது முதிர்ந்த அனைவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. இம்மாநாடுகளில், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்த லிங்கம், மாநில துணைத்தலைவர் சி.து ரைசாமி, மாவட்ட செயலாளர் ஜி. கணபதி, மாவட்ட தலைவர் வி.தங்க வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.