அவிநாசி, ஜூன்-20 அவிநாசி பேரூராட்சி பகுதியில் புதி தாக எந்த ஒரு டாஸ்மாக் கடையும் இனி அனுமதிக்க கூடாது என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவிநாசி பேரூராட்சி மன்றக் கூட்டம் பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி தலைமையிலும், துணைத் தலைவர் மோகன், பேரூராட்சி ஆணையர் இந்துமதி உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் 14 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் திராவிட முன்னேற் றக் கழகத்தைச் சேர்ந்த கவுன்சிலர் கள் சிவப்பிரகாஷ், தங்கவேல், காங்கி ரஸ் கட்சியைச் சேர்ந்த கோபாலகி ருஷ்ணன் உள்ளிட்டவர்கள், அவிநாசி பேரூராட்சி பகுதியில் புதிதாக எந்த ஒரு டாஸ்மாக் கடையையும் இனி அனு மதிக்க கூடாது என்று மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முன் வைத்தனர். இந்த தீர்மானத்தை கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற கவுன்சிலர்களும் அங்கீகரித்தனர். இத னைத் தொடர்ந்து மடத்துப்பாளையம் செல்லும் சாலையில் புதிய ரவுண்டானா ஒன்று அமைய உள்ளது. இதற்கு கலை ஞர் நூற்றாண்டு நினைவு வளைவு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கவுன் சிலர் கோரிக்கை வைத்தார். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சி லர் கோபாலகிருஷ்ணன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வணிக வளாக கட் டிடத்தில், அங்கீகரிக்கப்பட்டு பத்திரிக் கையாளர்கள் செயல்பட்டு வருகிறார் கள். இவர்களுக்கு என்று தனி அறை ஒன்று அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். இக்கோரிக்கை ஆணை யர் பரிசீலிப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் சேவூர், புளியம் பட்டி, பழங்கரை, பெரியாயிபாளையம் பகுதிகளில் மாலை நேரங்களில் பய ணிக்கும் தொழிலாளிகள், மாணவ, மாணவிகளுக்கு கூட்ட நெருக்கடி ஏற்ப டுகிறது. இப்பகுதி மக்களுக்கு கூடு தலாக பேருந்து இயக்கக் கோரியும், புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் மின் விளக்கு அமைக்கக் கோரியும் மன்றத் தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.