districts

img

அறநிலையத்துறை இடங்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்திடுக

தருமபுரி, ஜூன் 2- தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் தருமபுரி மாவட்ட முதல் மாநாடு தருமபுரி  முத்து இல்லத்தில் நடைபெற் றது. மாவட்ட தலைவர் கே.என். மல்லையன் தலைமையில் நடை பெற்ற இந்த மாநாட்டில், பெரி யாம்பட்டி பண்ணீர் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட செயலாளர் சோ.அருஜ் சுணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செய லாளரும், ஒன்றிய கவுன்சில ருமான வி.உதயக்குமார் வேலை அறிக்கை முன்வைத்தார். பால்  உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட  தலைவர் கே.அன்பு, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை செய லாளர் ஆர்.சக்திவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  அறநிலைத்துறை சட்டம் 34-ன்  படி பல தலைமுறைகளாக குடியி ருப்போர், விவசாயிகள், சிறு கடை நடத்துபவர்கள், அந்தந்த இடங்களுக்கான நியாயமான விலையை தீர்மானிக்க வேண் டும். கிரையத்தொகையை தவணை முறையில் பெற்றுக் கொண்டு இடங்களை பயனாளிக ளுக்கு சொந்தமாக்க வேண்டும். வறுமைகோட்டின் கீழ் உள்ளவர்க ளுக்கு இலவசமாக அரசே பட்டா வழங்க வேண்டும். அரசாணை 318யை செயல்படுத்த தமிழக  அரசு சட்ட ரீதியான நடவடிக்கை  எடுக்க வேண்டும். அறநிலை சட்ட பிரிவு 78,79 யை பயன்படுத்தி வீடு களை காலி செய்ய நோட்டீஸ் அனுப்புவது, வீடுகளை பூட்டி சீல் வைப்பது போன்ற நடவடிக்கை களை உடனே நிறுத்த வேண்டும். தலைமை செயலாளர் தலைமை யில் அமைக்கப்பட்டுள்ள புதிய வாடகை நிர்ணயகுழுவில் பயணா ளிகளின் பிரதிநிதிகளை உறுப்பி னர்களாக இணைக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதற்குமான வாடகை  குத்தகை தொகையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனை தொடர்ந்து மாவட்ட தலைவராக வி.சக்திவேல், மாவட் டசெயலாளராக வி.உதயகுமார், மாவட்ட பொருளாளராக வி. குழந்தை உள்ளிட்ட 11 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் சக்திவேல் நன்றி தெரிவித்தார்.