சேலம், ஜன.21- பொதுத்துறை நிறுவனமான பிஎஸ் என்எல் நிறுவனத்தை பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிஎஸ்என்எல் ஊழியர் சங்க சேலம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க சேலம் மாவட்ட 10 ஆவது மாநாடு ஒய்எம்சிஏ அரங் கத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, தேசிய கொடியை பொது மேலாளர் கே.சித்ரசேனன், சங்கத்தின் கொடியை மாவட்ட பொருளாளர் பி.தங்க ராஜ் ஆகியோர் ஏற்றி வைத்தனர். மாவட்ட செயலாளர் இ.கோபால் வரவேற்பு ரையாற்றினார். மாநிலச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அகில இந்திய உதவி பொதுச்செயலாளர் செல்லப்பா சிறப்புரையாற்றினார். பிஎஸ்என்எல் சேலம் பொது மேலாளர் சி.பி.சுபா, துணை பொது மேலாளர் பாஸ்கரன், பிஎஸ்என்எல் அதிகா ரிகள் சங்கத்தின் நாகராஜன், எஸ்.ரூபன் விஜய சிங் உள்ளிட்டோர் வாழ்த்துரை யாற்றினர். இம்மாநாட்டில், பிஎஸ்என்எல் நிறுவ னத்திற்கு உடனடியாக 4ஜி சேவையை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு மூன்றா வது ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் வழங்க வேண்டும். தேசிய பண மாக்கல் திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் நிறு வனத்தை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது. ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை யின்றி ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது. பொதுத்துறைகளை பாதுகாக்க வலியுறுத்தி அகில இந்திய அளவில் பிப்.23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து, மாநாட்டில் புதிய மாவட்ட தலைவராக எஸ்.ஹரிகரன், மாவட்ட செயலாளராக இ.கோபால், மாவட்ட பொருளாளராக எம்.சண்முகம் உள்ளிட்ட 19 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக மாவட்ட அமைப்பு செயலாளர் பி.செல்வம் நன்றி கூறினார்.