கோவை, ஜூலை 9– சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பல்வேறு பகுதி களில் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டங்களில் ஈடு பட்டனர். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து எரிபொருட்கள் மற்றும் எரிவாயு உருளையின் விலையை அன்றாடம் உயர்த்தி வருகிறது. மன் மோகன் சிங் பிரதமர் இருந்தபோது சிலிண்டர் விலை ரூ400 ஆக இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்தபின் தினசரி விலை யேற்றம் செய்து இன்றைய நிலையில் ஆயிரத்தை தாண்டி யது. இதுவும் போதாது என்று பேரிடிக்குமேல் இடியாக மீண்டும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ50ஐ உயர்த்தியுள்ளது. சிலிண்டர் விலை தற்போது ரூ1100ஆக உயர்ந்துள்ளது. இது சாதாரண ஏழை, எளிய மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி யுள்ளது.
இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவையில் மாதர் சங்கத்தினர் பெரிய நாயக்கன்பாளையம், கோவை வடக்கு, பீளமேடு, சிங்கை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். முன்னதாக மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு பூ மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து, பாடை கட்டி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட, இடைக் குழு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங் கேற்றனர். சேலம் இதேபோன்றுசமையல் கேஸ் விலை உயர்வுக்கு எதிராக சேலத்தில் மாதர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடு பட்டனர். சேலம் தாலுகா குழு சார்பில் நடைபெற்ற இயக்கத் தில் சேலம் தாலுக்கா செயலாளர் செல்வி, மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சிலிண் டர் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கம் நடத் திய கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் ஆர்வத்து டன் கையெழுத்திட்டு மாதர் சங்கத்திற்கு ஆதரவு தெரி வித்தனர்.