districts

img

20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்பு: மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை காயம்

திருப்பூர், மே 21- திருப்பூரில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பட்டியலின மக்கள் குடியிருப்பின் மேற்கூரை  இடிந்து விழுந்ததில், குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி, 5 ஆவது வார்டுக்குட்பட்ட கூலிபாளையத் தில் பட்டியலின மக்கள் குடி யிருப்பு உள்ளது. இப்பகுதியில் 2002 -2003 ஆம் ஆண்டு இந்திரா  குடியிருப்பு திட்டத்தின் கீழ் 16  வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 20  வருடங்களுக்கு முன்பு கட்டப் பட்ட இந்த வீடுகள் சமீப காலமாக சிதலமடைந்து வசிப்பதற்கு ஏது வான நிலையில் இல்லை.  இந்நிலையில், வெள்ளியன்று இரவு அங்கு வசிப்போர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், ஒரு வீட் டின் மேற்கூரை உடைந்து விழுந் தது. இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பரசுராமனுக்கு (4)  தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை பெற்றோர் தயாநிதி, வெண் ணிலா மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டு சென்றனர். இதற்கிடையே எந்நேரமும் விழுந் துவிடக் கூடும்  ஆபத்தான நிலை யில் தான் 16 வீடுகளும் உள் ளன.  எனவே மாநகராட்சி நிர்வாகம்,  நகர்ப்புற வாழ்வாதார  இயக்கம் மூலம் கூலிபாளையம் பட்டியலின மக்கள் குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளிலும் சீர மைப்புப் பணியை உடனடியாக மேற்கொண்டு அப்பகுதி மக்கள் உயிர் அச்சம் இல்லாமல் நிம்மதி யாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக் கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.