சேலம், டிச. 3- சேலம் மாநகரத்திற்குட்பட்ட 26ஆவது டிவிசன் குப்தா நகர் பகுதிகள் முழுவதும் மழை நீரில் மூழ்கியது. வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மார்க்சிஸ்ட் கட்சியினர் துரித கதியில் தலையிட்டு மீட்டனர். சேலம் மாநகர் 26 ஆவது கோட்டம் குப்தாநகர் 6முதல் 9வது குறுக்குதெரு, சினிமாநகர், சின்னேரிவயல்காடு உள்ளிட்ட பகுதிகளில் திங்களன்று இரவு மழைநீர் புகுந்தது. இரவு நேரத்தில் குழந்தைகளுடன் என்ன செய்வது என தெரியா மல் இருப்பவர்களை மார்க்சிஸ்ட் கட்சியினர் மீட்டு அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்த னர். இத்தகவலைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சி ஆணை யாளர் ரஞ்சித் சிங் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வை யிட்டு வெள்ளம் வெளியேற உடனடியாக நடவடிக்கை எடுக்க பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். சேலம் புதிய பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள குப்தா நகர் தாழ்வான பகுதியாக உள்ளதால் முறையான கழி வுநீர் போக்கிகள் இல்லாததாலும், சின்னேரி வயல் காடு பகு தியில் செல்லும் ஓடை பெரிய அளவில் பராமரிப்பு செய்யா ததின் விளைவாக குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ள நீர் சுமந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வீட்டில் இருக்கும் அனைத்து உடைகளும் மழை மீது சேதம் அடைந்ததால் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டு உள்ளனர். மீட்புப் பணிகளில் மார்க்சிஸ்ட் கட்சியி னர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்ட னர்.