districts

img

திருப்பூரில் சாக்கடையில் இருந்து ஐம்பொன் சிலை மீட்பு

திருப்பூர், பிப். 25 - திருப்பூரில் கல்லூரி சாலை யில் சாக்கடையில் இருந்து ஐம் பொன் சிலை ஒன்று வெள்ளி யன்று மீட்கப்பட்டது. திருப்பூர் கல்லூரி சாலை யில் உள்ள சாக்கடையில் சிலை  ஒன்று கிடப்பதாக பொது மக்கள்  காவல் துறைக்கு தகவல் அளித் தனர். இதையடுத்து காவல்  துறையினர் முன்னிலையில்  மாநகராட்சி துப்புரவுப் பணியா ளர்கள், பொது மக்கள் குறிப் பிட்ட இடத்தில் சாக்கடையில்  இருந்து சுமார் 3 அடி உயர கிருஷ் ணர் சிலையை எடுத்து சுத்தம்  செய்தனர். உடனடியாக, காவல் துறையினர் அந்த சிலையை  காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை மேற் கொண்டனர். இதில் கடந்த சில  வாரங்களுக்கு முன் திருமுரு கன் பூண்டியில் உள்ள ஸ்ரீ விவே கானந்த சேவாலயம் காப்ப கத்தில் இருந்து சிலை திருடப் பட்டதாக தெரியவந்தது. விவேகானந்த சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை  உட்கொண்டு ஒவ்வாமை ஏற்பட்டு மூன்று குழந்தைகள் உயிரி ழந்தனர். 12 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.  இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த காப்பகத்தை வரு வாய்த் துறையினர் பூட்டி வைத்தனர். காவல் துறையினர் பாது காப்பில் இருந்த அந்த காப்பகத்தில் உள்ளே இருந்த சிலை கள் திருடப்பட்டதாக காப்பக நிர்வாகி கடந்த மாதம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலை யில் கல்லூரி சாலையில் சாக்கடையில் இருந்து மீட்கப் பட்ட சிலை, காப்பகத்தில் திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை என் பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து இந்த சிலை சாக்கடையில் கிடந்தது குறித் தும், யாரேனும் திருடி வந்து காவல் துறையில் சிக்கக்கூ டும் என்ற நிலையில், பயந்து போய் சாக்கடை கால்வாயில்  வீசிச் சென்றார்களா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா  என்றும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பது  குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.