districts

காலிபணியிடங்களை நிரப்ப வருவாய் கிராம ஊழியர்கள் கோரிக்கை

திருப்பூர், நவ.16- தேர்வாணையம் மூலம் காலியாக  உள்ள கிராம ஊழியர்கள் பணியிடங் களை நிரப்ப வேண்டும் என வருவாய்  கிராம ஊழியா் சங்கத்தினர் வலியுறுத் தியுள்ளனர். இது குறித்து கிராம ஊழியா் சங்கத்தி னர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துரா ஜிடம் புதன்கிழமை அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது, 1999 ஆம் ஆண்டு  வழங்கப்பட்டு, கடந்த 23 ஆண்டுகளாக  பெற்று வந்த கருணை அடிப்படையி லான வாரிசுக்கு வேலை கடந்த மார்ச் 8  ஆம் தேதி நிறுத்தப்பட்டதை திரும்ப  வழங்க வேண்டும். 7 ஆவது ஊதியக்  குழு மாற்றுத் திறனாளி கிராம உதவி யாளர்களுக்கு வழங்கிய எரிபொருள் படி ரூ.2500 ஐ நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வேண்டும். பழைய ஓய் வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். கிராம நிா்வாக அலுவலர் பதவி உயர்வு என்பதை 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி வழங்க  வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்தி ருக்கும் கிராம ஊழியா்களுக்கு ஊர்தி  ஓட்டுநர் பதவி உயர்வு வழங்க வேண் டும். காலியாக உள்ள கிராம ஊழியர் கள் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். அதில் குறைந் தபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு என  நிா்ணயம் செய்ய வேண்டும். கடந்த  ஜனவரியில் 2,748 காலிப் பணியிடங் கள் நிரப்பப்பட்டு, புதிதாக பணிக்கு வந் தவர்களுக்கு முறையாக சிபிஎஸ் கணக்கு எண் வழங்கி ஊதியம் வழங்க  வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில், வருவாய் கிராம ஊழியர்  சங்க மாவட்டத் தலைவர் கே.நடரா ஜன், மாவட்டச் செயலாலர் ஆர்.சித்ரா,  மாவட்டப் பொருளாளர் சத்தியசீலன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.