உடுமலை, டிச.26- ஆதார் அட்டை திருத்தங்கள் மற் றும் புதிதாக பதிவு செய்ய, உடு மலை மற்றும் மடத்துகுளம் பகுதி யில் உள்ள கிராமங்களில் ஆதார் மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வா கத்தை வலியுறுத்தியுள்ளனர். உடுமலை மற்றும் மடத்துகுளம் தாலுகா அதிக மக்கள் தொகை கொண்ட கிராமங்களை கொண்டுள் ளது. இந்நிலையில், இத்தாலுகா வில் அரசின் பல்வேறு இ-சேவை களை பெற நகரங்களுக்கு வர வேண்டிய நிலையில், அங்கும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல் லாமல் உள்ளதால், நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப டுகிறது. தற்போது, உடுமலை மற் றும் மடத்துகுளம் தாலுகா அலுவல கத்திலுள்ள இ-சேவை மையம், தபால் நிலையம், உடுமலை நக ராட்சி அலுவலகம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மட் டுமே ஆதார் அட்டை குறித்த சேவை கள் டோக்கன் அடிப்படையில் வழங் கப்படுகின்றன. ஆனால், இந்த மையங்களில் தினமும் 25க்கும் குறைவான டோக் கன்கள் மட்டுமே வினியோகிக் கப்படுகிறது. இதனால், தொலை துார கிராமங்களில் இருந்து வரும் மக்கள் நாள்தோறும் இந்த மையங் களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும் பிச்செல்ல வேண்டியுள்ளது. மேலும், போதிய பேருந்து வசதி இல்லாத கிராமங்களைச் சேர்ந்த மக் கள், அதிகாலையில் கிளம்பி, காலை 6 மணியில் இருந்து நகரி லுள்ள மையங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் 5வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இந்த சேவை குறிப்பிட்ட மையங் களில் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, நாள்தோறும், குழந்தைக ளுடன், பெண்கள், நகருக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உடுமலை மற் றும் மடத்துகுளம் தாலுகாக்களில் உள்ள கிராமங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.