தருமபுரி, செப்.2- ஒடசல்பட்டி கிராமத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்ச னைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது. அம்மனுவில், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், அச் சல்வாடி ஊராட்சிக்குபட்ட ஒடசல்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி உள்ளது. தற்போது இந்த தொட்டி பழுத டைந்துள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, புதியதாக அமைய உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஏரியில் அமைக்க உள்ளதாக தெரி கிறது. இதனால், ஏரிக்கு அதிக தண்ணீர் வரும்போது குடி நீர் தொட்டி சேதமடையும். எனவே, எங்கள் கிராமத்திற்கு உள்ளே, நியாய விலைக்கடைக்கு அருகாமையில் குடி நீர் தொட்டி கட்டித்தர வேண்டும். மேலும், ஆழ்த்துளை கிணற்றின் மோட்டாரை பழுதுநீக்கி, பொருத்தி, ஒடசல் பட்டியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக் கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இவ் வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.