districts

img

திருப்பூர் வடக்கு பகுதியில் மகளிர் கல்லூரி அமைக்க கோரிக்கை

திருப்பூர், மே 23- திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மக ளிர் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் வடக்கு  ஒன்றிய 12ஆவது மாநாடு அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாதர் சங்க கொடியை சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.கண்ணம்மா ஏற்றி வைத்தார்.  பிரதிநிதிகள் மாநாட்டிற்கு வடக்கு ஒன்றிய தலைவர் கே.வசந்தி தலைமை தலைமை தாங்கினார். ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் மீனாட்சி, ஜெயக்கொடி, கீதாலட் சுமி, பிரேமா, ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்த னர். துணைத் தலைவர் கே.எஸ்.கற்பகம் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் வளர்மதி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். செயலாளர் பானுமதி, பொருளா ளர் மகாலட்சுமி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்த னர். வழக்கறிஞர் கௌரி பிரபாகரன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.அருள், மாற்றுத் திறனாளிகள் ஒன்றிய தலைவர் பி.ரோசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இம்மாநாட்டில் திருப்பூர் வடக்கு ஒன்றிய பகுதியில் மக ளிர் கல்லூரி மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி துவங்க வும், திருப்பூர் வடக்கு பகுதியில் உள்ள நியாய விலை கடை களில் பொருட்கள் வழங்குவதை முறைப்படுத்தி, ஒரே  முறையில் அனைத்து பொருட்களும், பொது மக்களுக்கு கிடைக்கும் வகையில் மாவட்ட குடிமை பொருள் வழங் கல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பெண் களுக்கு அறிவித்துள்ள இலவச கட்டணமில்லா பயணத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்திட நகரப் பேருந்து கள் பெண்கள் நிற்கும் பேருந்து நிறுத்தங்களில் நின்று செல் வதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் வடக்கு ஒன்றிய தலைவ ராக கே.வசந்தி, செயலாளராக எஸ்.பானுமதி, பொருளா ளராக கே.பாண்டிதேவி, துணைத் தலைவராக கே.எஸ்.கற்ப கம், துணை செயலாளராக இ.மங்கலட்சுமி உள்பட 13 பேர்  கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. இம்மா நாட்டை நிறைவு செய்து மத்தியகுழு உறுப்பினர் வி.பிரமிளா நிறைவுரை ஆற்றினார். கே.பாண்டிதேவி நன்றி கூறி னார்.