districts

img

சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் கிராவல் மண் கடத்தல் முறைகேட்டை களைந்து விவசாயிகளை அனுமதிக்க கோரிக்கை

உடுமலை, மே 24 – பெரிய வாளவாடி கிராமத்தில் உள்ள குட்டைகளில் சமூக ஆர்வலர் கள் என்ற பெயரில் கிராவல் மண் கடத்து வோரை தடுத்து நிறுத்துவதுடன், அர சாணைப்படி விவசாயிகளுக்கு கிரா வல் மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசா யிகள் சங்க திருப்பூர் மாவட்டத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன் மாவட்ட ஆட் சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: ‌உடுமலை தாலுகா, பெரியவாள வாடி கிராமத்தில்  சப்ட்டியர் குட்டை மற் றும் க.ச. 250 நடுக்குட்டை ஆகிய குட் டைகளில் வண்டல் மண், கிராவல் மண்  எடுக்க விவசாயிகள் அனுமதி கோரி  2023 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில்  நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்  கூட்டங்களில் மனு அளித்துள்ளனர்.  விவசாயிகள் சங்கமும் இக்கோரிக் கையை நிறைவேற்ற வலியுறுத்தி யுள்ளது. ஆனால், இதுநாள் வரை எவ்வித பதி லும் இல்லாமல் உள்ளது. ஆனால்  மேற்கண்ட குட்டைகளில்  எவ்வித அனு மதியும் இன்றி சட்ட விரோதமாக கிரா வல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதை வருவாய்த் துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். கிராவல் மண்  எடுக்க சமூக ஆர்வலர்கள் என்ற பெய ரில் ஆட்சேபனை தெரிவித்து வந்தவர் களே, ஒன்று சேர்ந்து முறைகேடாக மண்  எடுத்து விற்பனை செய்து வருகின்ற னர். விவசாயிகளுக்கு மண் கொடுக்கி றோம் என அதிக தொகை கேட்டு வருவ தாகவும் தெரிய வருகிறது. எனவே விவ சாயிகள் வண்டல் மண் கேட்டால் ஆட்சேபனை செய்வதும், சிறு குழுவாக  சேர்ந்து கொண்டு சட்டவிரோதமாக அடாவடித்தனம் செய்து மேற்கண்ட குட் டைகளில்  மண் எடுத்து விற்பனை செய் வதும் நடைபெறுகிறது.  இதை தடுத்து  நிறுத்திடவும், தமிழ் நாடு அரசின் அரசாணைப்படி விவசாயி கள் அனைவருக்கும் வண்டல் மண், கிராவல் மண் கிடைக்கும் வகையில் அனுமதி வழங்க வேண்டும்  என தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  கேட்டுக் கொள்வதாக எஸ்.ஆர்.மது சூதனன் கூறியுள்ளார்.