districts

கோயில், வக்பு நில வெளியேற்ற பிரச்சனை

திருப்பூர், மே 6- திருப்பூர் மாவட்டத்தில் இனாம்  நிலங்களில் பட்டா வைத்திருக்கும்  விவசாயிகளை கோயில், வக்பு  என்று சொல்லி குத்தகைதாரர் களாக மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும். பத்திரப்பதிவு தடையை நீக்க வேண்டும் என்று  தமிழ்நாடு விவசாய சங்கம், தமிழ் நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு  சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், மாவட்ட செயலாளர் ஆர். குமார் மற்றும் தமிழ்நாடு அடிமனை  பயனாளிகள், குத்தகை விவசாயி கள் பாதுகாப்பு சங்க மாவட்ட தலை வர் சி.சுப்பிரமணியம், மாவட்ட  செயலாளர் ஆர்.வெங்கட்ராமன்  ஆகியோர் விடுத்துள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது, சமீப காலமாக திருப்பூர் மாவட் டத்தில் தாராபுரம், குண்டடம், காங்கேயம், மடத்துக்குளம், குடி மங்கலம், ஊத்துக்குளி, அவிநாசி  வட்டாரங்களில் ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலங்களில் ஆண் டாண்டு காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளையும், குடியிருப்பு வாசிகளையும் துன்பத் திற்கு உள்ளாக்கும் வகையில் அற நிலையத் துறையும், வக்பு வாரி யமும் புதிய, புதிய அறிவிப்புகளை  செய்து வருகிறது. குறிப்பாக, பத்திரப்பதிவு துறைக்கு இந்த நிலங்களை பத்தி ரப்பதிவு செய்யக்கூடாது என தடங்கல் மனு கொடுத்து பத்திரப் பதிவுகளை நிறுத்தி வருகின் றனர். நிலங்களை வழிகாட்டி புத்தகத்தில் பூஜ்ஜியம் மதிப்பு செய்து வைத்துள்ளனர். இதனால்  ஆண்டாண்டு காலமாக நடந்து  வந்த பத்திரப் பதிவு நடவடிக்கை கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நிலங்களில் அனு பவத்தில் இருக்கிற விவசாயி களுக்கு தெரியாமல் நவீன தொழில்  நுட்பங்களைக் கொண்டு அளவீடு  செய்து, குத்தகை ஏல அறிவிப்பு களை செய்து வருகிறார்கள்

சில இடங்களில் பொய்யான  தகவல்களை சொல்லி விவசாயி களை ஏமாற்றி வருகின்றனர். சில  இடங்களில் அவர்களை வெளி யேற்றுவதற்கான அறிவிப்பையும் அளித்து வருகிறார்கள். முறை யான ஆவணங்களை வைத்து  பல்லாண்டுகளாக பத்திரப்பதிவு செய்து அனுபவித்து வருகிறார் கள். காடு திருத்தி கழனி ஆக்கி கிணறு வெட்டி பல்லாண்டு கால மாக தென்னை போன்ற நீண்ட கால  பயிர் சாகுபடி செய்தும், இதர பயிர்  சாகுபடி செய்தும் வருகிறார்கள். உழைப்பை செலுத்தி நாட்டுக்கு விவசாய உற்பத்தியை செய்து கொடுத்து வருகிறார்கள். சில  இடங்களில் முறையான ஆவணங் களை கொண்டு குடியிருப்பு மனை களாக உருவாக்கி விலைக்கு கிரயம் பெற்று வீடு கட்டி பல்லாண் டுகளாக குடியிருந்து வருகிறார் கள். வாழ்நாள் உழைப்பையே இம்மனைகளில் முதலீடாக்கி யுள்ள இம்மக்களுக்கு இத்தகைய அறிவிப்புகள் பேரிடியாக உள்ளது. இந்நிலையில், நில உரிமையை  பறிக்கும் வகையில் அறநிலையத் துறை, வக்பு வாரியம் ஆகிய வற்றின் தற்போதைய செயல்பாடு களால் விவசாயிகளும், குடி யிருப்பு நில அனுபவதாரர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆகவே, உழபவ னுக்கு நிலம் சொந்தம் என்ற அடிப்படையில் மேற்படி குத்தகை அறிவிப்பு, வெளியேற்றும் அறி விப்பு, பத்திரப்பதிவு தடை போன்ற வற்றை தமிழ்நாடு அரசு கைவிட்டு,  மேற்படி இனம் நில விவசாயிக ளுக்கும், குடியிருப்பு அடிமனை தாரருக்கும் நிரந்தரமாக, நிம்மதி அளிக்கும் வகையில் பத்திர பதிவு  செய்ய உள்ள தடையை நீக்குவ தற்கும், அந்நிலங்கள் அவர் களுக்கு சொந்தமானவை என  அறிவிப்பதற்கும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். கோயில்  மற்றும் பூமி தான நிலங்களில் விவ சாயம் செய்து வரும் விவசாயி களுக்கு குத்தகை பதிவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கலந்தாலோசனை கூட்டம் மேற்கண்ட நிலப்பிரச்சனை களில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க தாராபுரம் பெரியார் சிலை எதிரில் உள்ள சங்க அலுவலகத்தில் மே 13  ஆம் தேதியன்று காலை 10 மணிக் கும், திருப்பூர் பழைய பேருந்து  நிலையம் எதிரில் (மரக்கடை சந்து)  பி.ஆர்.நிலையத்தில் அன்று மாலை 4 மணிக்கும் நடைபெற வுள்ள கூட்டத்தில் அனைத்து  சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சென்னை வ.செல்வம் கலந்து கொள்கிறார்.  இதில், பாதிக்கப்பட்ட விவசாயி களும், குடியிருப்பு அடிமனை தாரர்களும் திரளாக கலந்து  கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.