தீர்த்தமலையில் குவிந்துள்ள நெகிழிப் பொருள்களை அகற்ற கோரிக்கை தருமபுரி, ஜன.4- அரூர் வட்டம், தீர்த் தமலையில் குவிந்து கிடக்கும் நெகிழிப் பொருட்களை அகற்ற வேண்டும் என அப்ப குதி பொதுமக்கள் வலி யுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீர்த்தமலையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் வருகை தருகின்றனர். அதேபோல், தீர்த்தமலை வழி யாக செல்லும் அரூர் - திருவண்ணாமலை வழித்தடத்தில், கோட்டப்பட்டி, சிட்லிங், டி.அம்மாபேட்டை, அனுமன்தீர்த் தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து கள் இயக்கப்படுகின்றன. இதனால் நாள்தோறும் ஏராள மான பயணிகள் தீர்த்தமலைக்கு வந்துச் செல்லும் நிலை யுள்ளது. இந்த நிலையில், தீர்த்தமலை பழைய பேருந்து நிலையம், அரசு தொடக்கப் பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்திய நெகி ழிப் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, தீர்த்தமலையில் பய னற்று கிடக்கும் நெகிழிப் பொருட்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.